Skip to main content

அது என்ன எண்பேரெச்சம்?

பழந்தமிழ் இலக்கியங்களில் அரிதாகக் காணப்படும் செய்திகள் பல.


அதில் ஒன்று எண்பேரெச்சம்.


அது என்ன எண்பேரெச்சம்?


அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று சொல்லுவார்கள். அப்படி அரிதான மானிடப் பிறப்பிலும் குறை தோன்றி விடுவதுண்டு. அத்தகைய குறைகளை எண்பேரெச்சம் என்று பழந்தமிழர் வகைப்படுத்தினர்.  


அதை ' சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் யாவும் எருளும் ' என்று எண் வகைக் குறைப் பிறப்புகளை எண்பேரெச்சம் என்று புறநானூறு கூறும்.


சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்

கூனும் குறளும் ஊமும் செவிடும்

மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு

எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்

பேதைமை அல்லது ஊதியம் இல்லென

முன்னும் அறிந்தோர் கூறினர்

(புறநானூறு)



இந்த எட்டில் எளிதாகக் காணப்படுவன செவிடும், ஊமையும், கூனும், குறளும் ஆகிய நான்கும்.


சிறப்பில் சிதடு என்பது அறிவு குறைந்து மூளை சிறியதாய்ப் பிறக்கும் பிறப்பு. சிதட்டுக்காய் போல் தலையில் உள்ளீடு இல்லாத பிறப்பு.


உறுப்பில் பிண்டம் என்பது கண், மூக்கு, முதலிய உறுப்புகள் இல்லாமல் பிறக்கும் மணைக்கட்டைப் பிறவி. இதை 'ஊன்தடி' என்று சொல்வதும் உண்டு.


' குழவியிறப்பினும் ஊன்றடி பிறப்பினும் ' என்ற பாடல் அடி இதைத் தான் சொல்கிறது.


இவற்றை விட அரிதான பிறவிகள் மாவும் மருளும். அது என்ன என்று கூறும் பி.எல்.சாமியின் விளக்கம் வியக்க வைக்கும். 


மானிடப்பிறப்பில் எத்தனை குறையுண்டோ அத்தனையும் பழந்தமிழர் அறிந்திருந்தவை தான் என்பது இப்போது தான் நமக்குப் புரிகிறது. 


அந்த அரிதான பிறவிகள் பற்றி ஒரு தனிச் செய்தியில் பார்ப்போம்.

 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...