Skip to main content

எனக்கு ஒரு சந்தேகம்!

 

அடர்ந்த காடுகள் பெரிய சோலைகள் இதெல்லாம் மன்மதனின் படைவீடுகளோ?  


அழகிய இந்த வானம் அந்த மன்மதனின் தேரோடும் வீதி தானோ!


அலைபாயும் இந்தக் கடல் தான் அவனது மீன்கொடியோ!


இப்படி அந்த மன்மதனின் சாம்ராஜ்யம்.


எனக்கு அதில் ஒரு சந்தேகம்.


இந்த உலகம் பூராவும் உள்ள புராணங்கள் எல்லாம் சிவபெருமான் மன்மதனை எரித்து விட்டதாகச் சொல்கின்றன.


அந்த மன்மதன் எரிந்து போனது உண்மையானால் நான் இப்படி காதல் மயக்கத்தில் மாட்டிக்கொண்டு   அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கமாட்டேனே!


சிவ பெருமான் மன்மதனை எரித்து விட்டான் என்று சொன்னதெல்லாம் பொய்யாகத் தான் இருக்குமோ!


நளன் மேல் காதல் கொண்ட தமயந்திக்குத் தான் இப்படியொரு சந்தேகம்!



கானும் தடங்காவும் காமன் படைவீடு

வானும்தேர் வீதி மறிகடலும் - மீனக்

கொடியாடை வையமெல்லாம் கோதண்ட சாலை

பொடியாடி கொன்றதெல்லாம் பொய்.

(நளவெண்பா)



கான் - கானகம்


தடங்கா - பெரிய சோலைகளும்


மறிகடல் - அலை பாயும் கடல்கள்


கோதண்ட சாலை - போர்க் களம்


பொடியாடி - சிவபெருமான் 

(சாம்பல் பொடியை உடலில் பூசிக் கொண்டு ஆடுவதால் பொடியாடி.

ஆகா இப்படி ஒரு பெயரா!)




Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...