1 டிசம்பர் 1783: ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூனில் சார்லஸ், எயினி எனும் இருவர் 2 மணி நேரம் பறந்து காண்பித்தனர். வெப்பக் காற்று நிரப்பப்பட்ட பலூனை விட ஹைட்ரஜன் வாயு பலூன் மேலானது என்று இன்று நிரூபிக்கப்பட்டது. 1 டிசம்பர் 1862: உத்திர பிரதேசத்தில் ஆக்ராவில் வானிலை ஆய்வுக்கூடம் திறக்கப்பட்டது. 1 டிசம்பர் 1877: கல்கத்தா வர்த்தகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியாவில் முதன்முறையாக வி.பி.பி யில்(V.P.P) பார்சல் அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1 டிசம்பர் 1901: தமிழ் எழுத்தாளர் வை.மு. கோதை நாயகி அம்மாள் பிறந்த தினம். பெரிய புராணத்தின் முதல் பாடல்- 'உலகெலாம் உணர்ந்து' என்று தொடங்கும்.. சேக்கிழார் பெருமானுக்கு சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்ததாக எண்ணப்பட்டு, அதிலிருந்து வந்த வாழ்த்துப் பாடல் இது. உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் . சேக்கிழார் எப்படி அந்த முதல் அடியைப் பற்றிக்கொண்டாரோ அதே போல் தனக்கும் 'உ, து' வை அமைத்துக் கொண்டவர் வை.மு.கோதைநாயகி அம்மாள். அதை ஒ...