Skip to main content

செப்டம்பர் 22

செப்டம்பர் 22,1791:

மைக்கேல் பாரடே இங்கிலாந்தில் இன்று தான் பிறந்தார்.

 செப்டம்பர் 22,1547:

சாண்டாமாரியாஎன்னும் கப்பலைக் காப்பீடு செய்து அதற்கான காப்பீட்டுப் பத்திரம் (Marine Insurance Policy) ஜான் புரோக் என்பவருக்கு வழங்கப்பட்டது.  

முதல் மரைன் இன்சூரன்ஸ் பாலிஸி இது.

 செப்டம்பர் 22,1914:

எம்டன்என்னும் ஜெர்மனி போர்க்கப்பல் சென்னை நகரை குண்டு வீசித் தாக்கியதுஇரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது. மொத்தம் 130 குண்டுகளை அது வீசியது.





முதல் உலகப் போரின் போது சென்னையில் குண்டுவீசப்பட்டது பற்றிய  ஒரு குஜிலிப் பாடல் இது. 
(குஜிலிப்பாட்டு என்பது ஓரளவு எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் பாடும் பாட்டு என்பதால் எழுத்துப் பிழைகள் மலிந்திருக்கும்)



  செந்தில் ஆண்டவர் துணை 

 
செஏன்னப் பட்டணத்தில் ஜெர்மன் எம்டன் கப்பல் கடர்க்கரையிலிருந்து குண்டடி ஆரம்பிக்க பிரிட்டிஷ் சேனைகள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து எம்டன் கப்பலை குண்டால்அடித்துத் துரத்திய வல்லமை சிந்து.

இஃது விஜயபுரம் நா.  சபாபதி பிள்ளை அவர்களால் இயற்றியதை பூர்வீகம் ஏனங்குடியிலிருந்து இப்போது விஜயபுரம் பள்ளிவாசல் தெருவில் வந்திருக்கும் செ.மு. முகமது காசீன் றாவுத்தர் அவர்களின் முயர்ச்சியின் பேரில் அச்சிடப்பட்டது.

இஃது மன்னார்குடி பாரதி பிரஸில் பதிப்பிக்கப் பெற்றது.

  1914 பைசா 6

  விருத்தம் 

கொடி முழங்கும் இங்கிலீஷின் ,மகுடம் வாழ கீர்த்தி பெற்ற செங்கோல் முன் தழைத்து வாழ முடி வணங்கி சிற்றரசர் புடைகள் சூழ 

உல்லாச கொடி வழங்க உலகமெல்லாம் 

படி வரியாய் நழுவாது குடிகள் தன்னை பக்குவமாய் ஆதரிக்கும் பமணிங்கிலீஷ்

 இடி முழங்கும் தொனியுடனே யுத்தம் செய்யும் என்னேவொண்ணா வல்லபத்தை இயம்புவேனே.

 கும்மி

 
ஆண்டு துலாயிரத் தானபதி  னான்கில்

ஆனதோர் செப்டம்பர் மாதமதில்

வேண்டிய தேதி இருபத்தி ரெண்டினில்

விழுந்த தென்றார் குண்டு சென்னை தனில்.

 

ஜெர்மனி எம்டன் குரூஸர் கப்பலது

சென்னை கடற்கரை தென்கிழக்கில்

அருணனி ரங்கி இருட்டுக  ளானதும்

அங்கே ஒளியுடன் நின்றதுவே.

  

நின்று எதிர்நோக்கி பட்டணம் தன்னில்

நிமிஷ மிருபது நேர மட்டும் 

குண்டுகள்  விட்டுமே கோட்டை லைட் ஹவுஸ் 

குந்தம் செய்ய குண்டை விட்டனறே.

 

ஜெனறலென்னும் போஸ்ட் ஆபீஸின் பில்டிங்குகள் 

சீர்பெரும் தந்தி ஆபீஸில்

கன விரைவாக ஓர் குண்டு வீழ்ந்திட

 கட்டடத்தில் துளை சொற்பம் என்றார்.

 

கடற்கரை உள்ள ஓர் கிட்டங்கிதனிலும் 

காணும் போர்ட் ஆபீஸ் கூரையிலும் 

தடபுட சத்தமாய் குண்டு விழுந்திட 

சார்ப்பின் கூரை கொஞ்சம் பத்தியதே.

 

சின்ன ரயிலென்னும் தென்னிந்தியா வண்டி 

சீரான காரேஜ் பீச்சில் நிற்க 

முன்னே விழுந்திட குண்டுமதன் பேரில் 

மூலையில் கொஞ்சம் எரிந்ததென்றார்.


என தொடர்ந்து  கும்மிப் பாடல் வடிவில் உள்ளது இந்த குஜிலிப்பாடல்.


செப்டம்பர் 22, 1916 

நாவலாசிரியர் விந்தன் பிறந்த நாள். 

செப்டம்பர் 22, 1930 

பிரபல பின்னணிப்பாடகர் பி. பி. ஸ்ரீநிவாஸ் பிறந்த நாள்.

'காலங்களில் அவள் வசந்தம்' எனும் பாடலால் என்றும் வாழும் குரலுக்குச் சொந்தக்காரர்.

தமிழ்ப் படங்களில் ஜெமினி கணேசனுக்கு இவரது குரல் அழகாகப் பொருந்திப்போனது. 

ஏப்ரல் 14, 2013 இவர் மறைந்த  நாள்.

செப்டம்பர் 22, 1931-

எழுத்தாளர் அசோகமித்திரன்  பிறந்த நாள்.

இவரது இயற்பெயர் தியாகராஜன். அசோகமித்திரன் என்பது புனைபெயர். இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது .  ஆங்கிலத்தில் பெரும் புலமை பெற்றவர் இவர். பெரும்பாலும் ஆங்கில நாளிதழ்களில் தான் எழுதி வந்தார். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த பெருமைக்குரியவர். 

1996-இல் அப்பாவின் சிநேகிதர் என்ற இவரது சிறுகதை சாஹித்ய அகாடெமி விருது பெற்றது. 

மார்ச் 23, 2017 இவர் மறைந்த நாள். 

செப்டம்பர் 22,1972:

ராவண காவியம் உள்ளிட்ட சில நூல்களை எழுதிய புலவர் குழந்தை மறைந்த தினம்.

செப்டம்பர் 22, 1993:

மணிப்பூரில் டாலோலாஸ் என்னும் கிராமத்தில் குகி இனத்தைச் சேர்ந்த 13 குழந்தைகள் உயிரோடு கொளுத்தப்பட்டனர்.

 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...