Skip to main content

இவியப்பா வருவாங்க...

      வெகு காலத்துக்கு முன்பு நமது சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்தது.  குழந்தைகள் பெயரை முன்வைத்து குழந்தையின் தந்தையை குறிப்பிடுவதை சேய்வழிஅழைத்தல் என்ற மரபாகப் போற்றினர். தாய் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது திருமணத்திற்குப் பின் கணவன், மனைவியின் வீட்டில் சென்று வாழ்ந்து வந்தான்.  தொழில் காரணமாக அவ்வாறு மனைவியின் வீட்டில் வாழ முடியாத போது அடிக்கடி சென்று வருபவனாக இருந்தான்.

       தாய்வழிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உற்றார் என்றும் பெண்ணின் கணவன் வழியைச் சேர்ந்தோர் உறவினர் என்றும் கருதப்பட்டனர். ஒரு குடும்பத்தின் மருமகனைக் குறிப்பிட்டுக் கூற முற்பட்டபோது குழந்தையின் தந்தை என்றே குறிப்பிட்டனர். சேய்வழி அழைத்தல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.

 முன்கை இழையணி பணைத்தோள் ஐயை தந்தை (அகநானூறு பாடல் 6), அகுதை தந்தை(குறுந்தொகை பாடல்  298) என மருமகனை 'மகள் குழந்தையின் தந்தை' என்றே குறிப்பிடுகின்றன. இன்றும்கூடமாமியார் தன் மருமகனைக்  குறிப்பிட்டுச் சொல்லும் போது "இவியப்பா வருவாங்க" , "இவியப்பா  என்ன சொல்றாங்கன்னு தெரியலை" என்று கூறுவதைப் பார்க்கிறோம்.
 
இவியப்பா என்பது இரண்டாயிரமாண்டு பாரம்பரியத்தின் மிச்சமாக இன்றும் விளங்குகிறது. 

 உற்றார் உறவினர் என்று கூறுகிறோம் உற்றார் என்பது ரத்த சம்பந்தமுடைய சொந்தம்.  உறவினர் என்பது ரத்த சொந்தங்களை மணம் புரிந்தோர். முன்பு உற்றார் பெண்வீட்டாராகவும் உறவினர் மாப்பிள்ளை வீட்டாராகவும் இருந்தனர். பின்பு உற்றார் என்பது மாப்பிள்ளையின் 'பெத்துப் பிறப்பையும்'  உறவினர் என்பது மாமியார் வழி சொந்தத்தையும் குறித்தன. 

 இன்று உற்றார் உறவினர் என்பது ஒரே பொருளைத் தரும் இரண்டு வார்த்தைகள் என்றே  நாம் மேலோட்டமாக புரிந்து கொண்டதால் இரண்டு வீட்டாருமே உற்றார் ஆக மாறிவிட்டனர்.  

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...