Skip to main content

அறிவின் திளைப்பில்-Kahlil Gibran...On Teaching

 

கற்பித்தலைப் பற்றி எங்களுக்குச் சொல்” என்று ஒரு ஆசிரியன் கேட்டான்.  


அவன் சொல்லத் தொடங்கினான்.


உங்களின் அறிவு மலர்ச்சியில் அரைத் தூக்கத்தில் இருக்கிற உங்களின் அறிவை உங்களுக்குக் காட்டுவதை உங்களைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது.


ஒரு நல்ல ஆசிரியன் ஆலயத்தின் நிழல் போல –

அவன் தன் சீடர்களுக்குக் கொடுப்பது அவன் அறிவையல்ல... மாறாக அவனுடைய நம்பிக்கைகளையும் நேசங்களையுமே அவன் கொடுக்கிறான். 


நல்ல ஆசிரியன் அவனுடைய அறிவின் வீட்டிற்கு உங்களை அழைத்துச் செல்லமாட்டான்.  மாறாக உங்களுடைய சிந்தனையின் வாயிலுக்கு உங்களை வழிநடத்துவான்.


விண்வெளியில் தான் கண்டு கொண்டதை விஞ்ஞானி உங்களுக்குச் சொல்லலாம்.  ஆனால் அவன் புரிந்து கொண்டதை அப்படியே உங்களுக்குக் கொடுக்க முடியாது.


இசைஞானி உலகத்தின் இசைவடிவங்களை இசைத்துக் காட்டலாம்.  ஆனால் ஞானத்தையோ குரலையோ உங்களுக்குக் கொடுக்க முடியாது. 

கேட்பவர்களின் காதுகளைக் கட்டிவைக்கும் நுட்பத்தைக் கற்றுத் தரமுடியாது.


அறிவியல், கணக்கில் அவன் எடையை, அளவைக் கற்றுத் தரலாம்.  அதற்கும் அப்பால் உள்ள ஞானத்தை எப்படிக் கற்றுத் தர முடியும்?


ஏனென்றால் ஒருவனின் கூர்ந்த அறிவின் மூலம் இன்னொருவனுக்கு இறக்கைகளைக் கொடுக்க முடியாது. 


ஆண்டவனின் அறிவின் திளைப்பில் எல்லோரும் தனித்தனி தான். 


கடவுளைப் பற்றிய அறிவாகட்டும்; பூமியைப் பற்றி புரிதலாகட்டும் -ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி தான். 

 

Then said a teacher, "Speak to us of Teaching."

 And he said:

No man can reveal to you aught but that which already lies half asleep in the dawning of our knowledge.

 The teacher who walks in the shadow of the temple, among his followers, gives not of his wisdom but rather of his faith and his lovingness.

If he is indeed wise he does not bid you enter the house of wisdom, but rather leads you to the threshold of your own mind.

 The astronomer may speak to you of his understanding of space, but he cannot give you his understanding.

 The musician may sing to you of the rhythm which is in all space, but he cannot give you the ear which arrests the rhythm nor the voice that echoes it.

And he who is versed in the science of numbers can tell of the regions of weight and measure, but he cannot conduct you thither.

 For the vision of one man lends not its wings to another man.

 And even as each one of you stands alone in God's knowledge, so must each one of you be alone in his knowledge of God and in his understanding of the earth.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...