Skip to main content

ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.

 ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.


இது சரியான வாக்கியமா? 

இது பிழையான வாக்கியம்.    

எங்கே உள்ளது பிழை?

பிழை 1:

முதலில் ' ரங்கன் ' என்ற பெயர்.

அதை அரங்கன் என்றே எழுத வேண்டும்.


'ரங்கசாமி ' என்பதை எப்படி 'அரங்கசாமி' என தமிழ் வழக்குப் படி எழுதுகிறோமோ அது போலத் தான் இதுவும். ஏனெனில் ர மொழிக்கு முதலில் வராது. 

பிழை 2:

வெங்கலப் பாத்திரக்கடை என்பது பேச்சு வழக்கு. அதை எழுதும்போது சிதைவின்றி எழுதவேண்டும்.

'வெண்கலப் பாத்திரக்கடை' என்பது சரியானது. 

பிழை 3:

இது தான் கொஞ்சம் நுட்பமானது.

'வைத்திருக்கிறார்' என்பது தவறு.

அரங்கன் என்பது ஒருவனைத் தானே குறிக்கும்.

இலக்கணப்படி அவர், இவர் என்பதெல்லாம் பன்மையைத் தான் குறிக்கும். 

ஆனால் அவன், இவன் என்று சொல்லும்போது மரியாதையில்லாமல் சொல்வதுபோல இருக்கிறதே. என்ன செய்ய?

தனி ஒருவனை ஒரு மரியாதைக்காக அவர்,இவர் என்று சொல்லவிரும்பினால் இலக்கணப் படி அது தவறு என்றாலும் அது சரி என்றே கொள்ளப்படும். ஆனால் அதற்கும் ஒரு முறை இருக்கிறது. 


ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்

ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்

வழக்கி னாகிய உயர்சொற் கிளவி

இலக்கண மருங்கின் சொல்லா றல்ல.

(தொல்காப்பியம்)

அதாவது,

ஒருவனையும் ஒருத்தியையும் சொல்லும் போது உயர்த்திச் சொல்ல வேண்டும் என்பதற்காக பன்மைச் சொல்லாகச் சொல்லலாம்.

ஒன்றனைச் சொல்லும் போதும் கூட அப்படிச் சொல்லலாம். 

அது இலக்கண முறைமை அல்ல என்றாலும் கூட தவறு என்று சொல்ல முடியாது.

கம்பன் காப்பியம் படைத்தான். - இது சரி.

கம்பன்  ஒருவன் தான். படைத்தான் அதற்கேற்ற சொல் தான்.

கம்பர் காப்பியம் படைத்தார். - இது இலக்கண முறைமை அல்ல என்றாலும் கூட தவறு என்று சொல்ல முடியாது.ஏனென்றால் உயர்வு கருதி அப்படிச் சொல்லலாம்.

கம்பன் காப்பியம் படைத்தார். இது தவறான வாக்கியம். இப்படிச் சொல்லக்கூடாது.


வரதராசன் துணைவேந்தனானான்.

இப்படிச் சொல்வது மரியாதை இல்லை என்று தோன்றுகிறதா?

வரதராசனார் துணைவேந்தரானார் 

என்று சொல்லலாம்.

ஆனால்,

வரதராசன் துணைவேந்தரானார் என்று சொன்னால் அது தவறு.


இப்போது மறுபடியும் அந்த வெங்கலப் பாத்திரக்கடைக்கு வருவோம்.

அரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறான்.  இது சரி.

அரங்கனார் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார். இது உயர்வுக்காக. எனவே சரி தான்.


அரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.இது நிச்சயம் தவறு. இப்படிச் சொல்லக்கூடாது.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...