Skip to main content

மண்ணைக் கவ்வி விட்டது

 

கைதவறிக் கீழே விழுந்த மொபைல் போன் வேலை செய்யவில்லை என்றால் "போன் மண்ணைக் கவ்விடுச்சு" என்று கூறுவது வழக்கம்.


அந்தக் காலத்தில் போரில் சண்டை போடும்போது நேருக்கு நேர் வாளெடுத்து போரிட்டனர். வாளால் வெட்டுப்பட்டவர் மண்ணில் விழுந்து வீர மரணம் அடைவர். 


இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த சண்டையில் ராவணன் மண்ணில் விழுந்து மரணமடைகிறான். அதைப் பார்த்த விபீடணன் "இராவணன் பூமியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்திருப்பது போல இருக்கிறது" எனப் புலம்புகிறான்.


போரில் மரணம் அடைபவர்களின் தலை பெரும்பாலும் மண்ணோடு ஒட்டியிருப்பது போல இருக்கும். அது மண்ணைக் கவ்விக் கொண்டிருப்பது போலத் தோன்றும்.


இந்தக் காட்சி தமிழ் இலக்கியங்களில் மட்டும் அல்ல மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த கிரேக்க இலக்கியத்திலும் இருக்கிறது. 


ஹோமர் எழுதிய ஒரு கிரேக்க இதிகாசம் இலியட் (Iliad). அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதிலும் போரில் மரணம் அடைபவர்கள் மண்ணைக் கவ்வும் காட்சி காட்டப்படுகிறது.


(.... his fellow warriors, many a one, fall round him to the earth and bite the dust)


ஆங்கிலத்திலும் இதே பொருளில் bite the dust குறிப்பிடப்படுகிறது. அதாவது மரணம் அடைவதை அல்லது இயங்காமல் போவதை bite the dust என்று கூறுகிறார்கள்.


இப்போதெல்லாம் தோல்வி என்ற பொருளில் கூட இந்த மண்ணைக் கவ்வுதல் குறிப்பிடப்படுகிறது. 


தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளன்று ஒரு குறிப்பிட்ட கட்சி ஜெயித்து விட்டதா என்று கேட்கும்போது மண்ணைக் கவ்வி விட்டது என்று சொல்வதும் இந்த வழக்கத்தில் வந்தது தான்.




 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...