Skip to main content

நெருப்பா? கடலா? - இரண்டில் எது?



தமிழ்நாட்டில் கோவையில் வியக்கத்தக்க விசயங்களைக் சாதாரணமாகச் செய்துகாட்டிய ஒரு மேதை இருந்தார். ஹிட்லரைச் சந்தித்த பெருமைக்குரியவர் அவர்.

அவர் G.D நாயுடு.

 ஒரு முறை அவர் கப்பலில் ஜெர்மனிக்குப் பயணமாகும் போது கப்பல் தீப் பற்றிக்கொண்டது. தீ மளமளவென நாலாபுறமும் பரவ கப்பலில் இருந்தவர்கள் உயிர்தப்ப கடலில் குதித்தனர். கடலிலோ சுறா மீன்கள். குதித்தவர்களில் பலர் சுறாவுக்கு இரையாகிப் போனார்கள். உயிர் தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை கொஞ்சமுமில்லை. ஆனாலும் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று தீயில் மாய்வது மற்றொன்று கடலில் விழுந்து சுறா வுக்கு இரையாவது. 


 தீயை விட கடலே பரவாயில்லை என்று முடிவு செய்தார். கடலில் குதித்தார்.


இப்படி இரண்டு அபாயகரமான வாய்ப்புகள் மட்டும் தான். அதில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய நிலையை ஆங்கிலத்தில் 

Between the devil and the deep blue sea

என்பார்கள். 


ஐயோ, அதெல்லாம் இருக்கட்டும் கடலில் குதித்தவருக்கு என்ன நடந்தது?


கடலில் குதித்த பின் அவரைச் சுற்றிலும் இருந்த சுறா மீன்கள் எதுவும் G.D. நாயுடுவை ஒன்றும் செய்யவில்லை. காப்பாற்றப்படும் வரை எந்தக் காயமும் இல்லாமல் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.


 உயிர் பிழைத்த இந்த அதிசயத்தைப் பற்றிக் கூறும் போது "நான் வாழ்நாள் முழுவதும் அசைவ உணவு உண்டதில்லை. எந்த உயிரையும் கொல்லாததால் தானோ என்னவோ சுறா மீன்கள் என்னை உயிர்பிழைத்துப் போகட்டுமென்று விட்டுவிட்டன" என்று கூறினார் நாயுடு.


மீண்டும் Between the devil and the deep blue sea க்கு வருவோம்.

நெருக்கடியான நேரத்தில் இரண்டு சங்கடமான வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்தே ஆக வேண்டும் என்ற நிலையைக் குறிக்க Between the devil and the deep blue sea என்பார்கள்.

Between the devil and the deep blue sea என்பதற்கு dictionary தரும் பொருள் என்ன?

If you say that you are between the devil and the deep blue sea, you mean that you are in a difficult situation where you have to choose between two equally unpleasant courses of action.


Example for the usage:

 My wife asked me to select one of the two silk sarees. I am caught between the devil and the deep blue sea.

For a pleasant feel you should not use 'between the devil and the deep blue sea'.

I know that. You only didn't know the  cost of the sarees. If you see the price tag you will agree my point.







 



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...