Skip to main content

Posts

Showing posts from September, 2022

வெறும் கூடை தான் இருக்கு

  காடை, கௌதாரி என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். காடைக் குருவி மிகக் குறுகிய தூரம் பறக்கக் கூடிய ஒரு பறவை.  தோட்டம், காடுகளில் தரையை ஒட்டி புழு பூச்சிகளைத் தின்று வாழுகின்ற ஒரு  பறவை. காடைக் குருவியை வேடர்கள்  கண்ணி வைத்துப் பிடிப்பது வழக்கம்.  அப்படிப் பிடித்த ஒரு காடைக்குருவியை தரையில் வைத்து அதன் மேல் கூடையைக் கவிழ்த்து வைத்துவிட்டு மற்றொரு கண்ணியைப் பார்க்க  வேடன் ஒருவன் போகிறான். சிறிது நேரம் கழித்து பிடித்த இந்தக்  காடைக் குருவியை எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று வந்து கூடையை லாவகமாகத் தூக்கிப் பார்க்கிறான். வெறும் கூடை தான் இருக்கிறது.  கூடைக்குள்ளிருந்த காடையைக் காணோம். ஒரே குழப்பம் அவனுக்கு. காடை எப்படி அதற்குள் காணாமல் போகும்? காடையை கூடைக்குள் வைத்து மூடி விட்டுப் போன பின், அந்தக் குருவி தரையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிளறி கூடையின் ஓரமாக கொஞ்சம் பள்ளம் தோண்டியது. அந்தப் பள்ளத்துக்குள் நுழைந்து கூடையின் மறுபுறம் வந்து பறந்து போய் விட்டது. காடை போனது அப்படியே இருக்கட்டும். அதற்குள் இதையும் பார்த்துவிடுவோம். பாண்டிய மன்னன் நகர் வலம் போகிற...

எத்தனை தோற்றங்கள்...

பார்ப்பதை எல்லாம்  இறைவனாகவே பார்த்து உருகும்  நாவுக்கரசர் ...  உன்னைப் போல் எனக்கு யார் ஆவார்?  உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.  நான் எதை நினைத்தாலும் அதன் மூலமாக நீயே இருக்கிறாய். எல்லா சிந்தனைகளுக்கும் நீயே ஆதாரம். நீயே மன்னனானாய்.  மன்னவர்களுக்கு ஓர் அமுதமும் ஆனாய். மறைகள் நான்குமானாய். அங்கங்கள் ஆறுமானாய். பொன்னானாய். மணியானாய். நான் அனுபவிக்கும்  எல்லாவற்றிலும் நீயே  அனுபவமும் ஆனாய். இந்த பூமியில் நான்  புகழத்தக்க ஒன்று உண்டு என்றால், அது நீதான். இப்படியெல்லாம் ஆன நீ  இன்னும்  என்னானாய், என்னானாய் ...  என்று எண்ணி எண்ணி நான்  வியப்படைவதைத் தவிர  நான் உன்னை என்ன சொல்லிப் புகழ்வேன். நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்     நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய் மன்னனாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்     மறைநான்கு மானாய்ஆ றங்க மானாய் பொன்னானாய் மணியானாய் போக மானாய்     பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை என்னானாய் என்னானாய் என்னி னல்லால்     ஏழையேன் என்சொல்லி யேத்து கேனே. (தேவாரம்) ...

இப்படியாக அவன்!

 அவள் தன் தோழியிடம் சொல்கிறாள். குளத்தில் பூத்த நெய்தல் மலர் போன்ற கண்ணை உடையவளே! என் தோழியே!   உனக்குத் தெரியுமா?  ஒருநாள் ஓடிய மானைத் தேடிக்கொண்டு வருபவன் போல ஒருவன் வந்தான். கையில் வில்லும் வைத்திருந்தான். என்னை உற்றுப் பார்த்தான். அவன்  கண்கள் என்னவோ சொல்ல முயன்றன.  ஆனால் அவனுக்கு என்னவோ நாணம் போல! தன் காதலை வாயால் சொல்லமுடியாமல் திரும்பிப் போய்விட்டான். அந்த ஒரு நாள் மட்டுமல்ல. அதன் பின் வந்தான். ஆனால் அவனுக்கு வாய் வரவில்லை. அப்படியே போய்விட்டான். இப்போதெல்லாம் அவனை நினைத்து எனக்குத் தூக்கம் வருவதில்லை. மீண்டும் எப்போது வருவானோ என அவனை நினைத்துக்கொண்டே  இருக்கிறேன். அவனோ தூரத்தில் இருக்கிறான்.  அவனுக்கோ என் கண்ணைப் பார்த்துச் சொல்லமுடியாத அளவு வெட்கம். ஆண் அவனே இவ்வளவு வெட்கப்படும்போது நான் போய் என் காதலை அவனிடம் சொல்ல முடியுமா?  அவனுக்கும் சொல்ல முடியாமல் வெட்கம்.  நானும் இப்படியே  இருந்தால் அவன் என்னைக் காண வராமல் போய்விடவும் கூடும் என்று எண்ணினேன். இனி நான் தான் துணிச்சலாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டேன். ஒர...

வளையல்

வில்லை வளைக்கும் முன்பாக முதன்முதலாக சீதை ராமனைச் சில நொடிகள் பார்த்திருக்கிறாள். பிறகு ராமன் வில்லை முறித்தது தோழிகள் மூலம் சீதைக்குத் தெரியவருகிறது. இப்போது இராமன் வந்து மணவறையில் வந்து அமர்ந்து இருக்கிறான். தோழிகள் சீதையை அழைத்து வருகிறார்கள். சீதைக்கு இராமனின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவல். எப்படி ப்  பார்க்க முடியும்? வெட்கம் ஒரு புறம். எல்லோரும் இருக்கிறார்கள். தலை நிமிர்ந்து பார்த்தால் கேலி செய்வார்களோ என்ற அச்சம் மறு புறம். யாருக்கும் தெரியாமல் , கையில் உள்ள வளையல்களை சரி செய்வது மாதிரி    கடைக்கண்ணால்  ராமனைப் பார்த்து விடுகிறாள் . எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும். மெய் விளைவு இடத்து. முதல் ஐயம் விடலுற்றாள். ஐயனை அகத்து வடிவே அல புறத்தும். கைவளை திருத்துபு கடைக் கணின் உணர்ந்தாள். வளையல் அணிந்த கையை உடைய பெண் ணை    'வளையள்' என்று சங்கப்பாடல்கள் கூறும். வளையோடு  விளையாடும் கண்ணதாசனின் வரிகள் இவை. சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக்கொள்வேன் கரம் தொட்டு என்னவளை காதல் சொன்னவளை நான் ஏற்றுக்கொண்டேன் வளை இட்டு வந்தவளை...

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்

  பாட்டும் தொகையும் என்பது பத்துப் பாட்டையும் எட்டுத்தொகையையும் குறிக்கும். எட்டுத்தொகை என்பது எட்டு நூல்கள். அவற்றுள் ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நான்கில் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவபெருமானைப் பாடுகின்றன. ஐங்குறுநூறு - கடவுள் வாழ்த்து இது. நீல மேனி வாலிழை பாகத்து ஒருவன் இரு தாள் நிழல் கீழ் மூவகை உலகு முகிழ்த்தன முறையே. இந்தப் பாடல் பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்டது. அவன் உண்மையில் ஒருவன். நீலநிறப் பெண்ணைத் தன் பாகத்தில் வைத்துக்கொண்டிருப்பவன்.  அதனால் அவனுக்கு ஆண்-திருவடி, பெண்-திருவடி என்று இரண்டு திருவடிகள். ஆணும் பெண்ணுமாக உள்ள இரு திருவடி நிழலில் தோன்றியவை தான் மூவுலகங்களும் உயிர்களும்.  பெண் இல்லாவிட்டால் உலகம் இல்லை என்பது பாடல் தரும் நுட்பமான செய்தி.  இந்தப் பாடலில் வரும் இந்த ஒன்று, இரண்டு, மூன்று என்பதில் கிடைத்த spark பின்னாளில் ஒரு அமரத்துவம் வாய்ந்த பாடலானது.  ஒன்றானவன் அவன். இரண்டானது அவன் வடிவம். மூன்றானவை உலகங்கள் என்று 1 ,2, 3 என இந்த ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து விதை போட, அது கண்ணதாசனின் மனதில் 1,2,3,4,5....

மாப்பிள்ளை அவர் தான். ஆனால்...

  ஒரு நாள் உண்மையும் பொய்யும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஆற்றில் குளிக்கப் போனார்களாம். முதலில் குளித்துவிட்டு ஆற்றை விட்டு வெளியே வந்த பொய் ஆற்றின் கரையில் இருந்த உண்மையின் உடைகளை எடுத்து போட்டுக்கொண்டு போய்விட்டது. சிறிது நேரம் கழித்து ஆற்றை விட்டு வந்த உண்மை தன்னுடைய உடைகள் ஆற்றங்கரையில் இல்லாததைப் பார்த்துத் திடுக்கிட்டது. ஆற்றங்கரையில் கிடந்த பொய்யின் உடைகளைப் பார்த்த உடனே அது புரிந்து கொண்டது, தன்னுடைய உடைகளை பொய் தான் மாற்றி அணிந்து கொண்டு போயிருக்கிறது என்று. ஆனாலும் கூட பொய்யின் உடையை அணிந்து கொள்ள விரும்பாமல் ஆடையே இல்லாமல் ஆற்றங்கரையில் இருந்து உண்மை கிளம்பிச் சென்றதாம்.    இன்றும் உண்மை எல்லாப் பக்கமும் பிறந்த மேனியாகத் தான் சுற்றிக் கொண்டு இருக்கிறதாம். இப்படி ஒரு புராணக்கதை.  இதிலிருந்து வந்ததுதான் naked truth என்ற ஆங்கிலப் பயன்பாடு. அதாவது பட்டவர்த்தனமான உண்மை.  உண்மையின் உடைகளை போட்டுக் கொண்ட பொய்க்கு எப்போதுமே ஒரு குற்ற உணர்ச்சி, யாராவது அது  தன்னுடைய உடை அல்ல என்று கண்டுபிடித்து விடுவார்களோ என்று. அதனால் பொய் யாரைச் சந்தித்தால...

இசையைச் சந்திக்க வேண்டிவரும்

  ராணுவத்தில் இருக்கும் ஒரு வீரரின் நேர்மையில் சந்தேகம் வந்தாலோ அடுத்தடுத்து தவறுகள் கண்டறியப்பட்டாலோ அவர் ராணுவத்தில் இருந்து நீக்கப்படுவார். அப்படி ஒருவரை நீக்க சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. நீக்கப்படுபவரது படைப்பிரிவு அணிவகுத்து நிற்க, அந்தப் பிரிவுக்கு முன்பாக அவர் நிறுத்தப்படுவார். ட்ரம்ஸ் இசைக்கத் துவங்கும்.  அந்தப் படைப் பிரிவின் அதிகாரி அவர் மேல் சுமத்தப்பட்ட குற்றத்தை படிக்கத் தொடங்குவார்.   தொடர்ந்து ட்ரம்ஸ் முழங்கிய படியே இருக்கும்.   அவரது மிலிட்டரி யூனிபார்மில் இருந்து ஒவ்வொரு முத்திரையாக(insignia) அவரது மிலிட்டரி உடையிலிருந்து கழற்றி எடுக்கப்படும்.  அதன்பின் அந்த ராணுவ வீரர் ராணுவ வளாகத்தில் இருந்து வெளியேற ஆணை பிறப்பிக்கப்படும்.   அவர் வெளியேறும் வரையில் ட்ரம்ஸ் இசைக்கப்படும்.   இது பழைய இங்கிலாந்தில் கடைப்பிடிக்கப்பட்ட மரபு.  "Face the music" என்பது ஒரு  ராணுவ வாசகம்.   விளைவுகளை சந்திக்கப் போகிறவரை எச்சரிக்கின்ற ஒரு வாசகம்.   அதாவது 'தண்டிக்கப்படப் போகிறாய்' என்பது அதன் உள்ளார்ந...

இது தான் நீ அருள் புரியும் அழகா?

  ஒருவரின் குறையைச்  சுட்டிக்காட்டுவதாக இருந்தாலும் நல்லதாக நாலு வார்த்தை சொல்லிவிட்டு அதன் பிறகு குறையைச் சுட்டிக்காட்டுவது ஒரு நல்ல உத்தி.  வெறும் தவறை மட்டும் சுட்டிக்காட்டி 'அறிவுரை அல்லது விண்ணப்பம் ' என்று சொன்னால் யாரும் காதுகொடுத்துக் கேட்க மாட்டார்கள். நல்லதாகச் சொன்ன அந்த வார்த்தைகள் நாம் சொல்லும் குறையையும் கவனித்து சரிசெய்து கொள்ள வைத்துவிடும். இந்த உத்தியை சிவபெருமானிடம் பயன்படுத்துகிறார் திருஞானசம்பந்தர். வாழ்க்கையில் நான் துன்பப்பட நேரிட்டாலும், வயது முதிர்வினால் உடல் தளர்ந்தாலும், முன்வினைப்பயனால் கொடுமையான நோய்கள் என்னைவிட்டு நீங்காமல் தொடர்ந்து வந்து வாட்டினாலும் உன் திருவடிகளை தொழுது வணங்குவேன். பாற்கடலில் அன்று அமுதத்துடன் சேர்ந்து தோன்றிய ஆலகால விஷத்தை கழுத்தினில் அடக்கி, எல்லோரையும்  காத்த வேத நாயகனே! இதுதான் உன் அடியேனை நீ ஆட்கொள்ளும் முறையா?  பூஜைக்கான  பொருளை நீ எனக்கு அளிக்கவில்லையே! அது தான் நீ திருவருள் காட்டும் அழகா? இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே...

என் கனவை எல்லோரும் பார்த்துவிட்டர்களா?

  புன்னை மரச்சோலை,  நீர் வளம் சூழ்ந்த தென்னந்தோப்பு , எங்கும் பூக்கள் பூத்துக்குலுங்கும் அவன் ஊரில்.  இரவில் ஒரு நாள் என் கனவில் அவன் வந்தான்.  அவன் என் கனவில் வந்தது இவர்களுக்கெல்லாம் எப்படியோ தெரிந்து விட்டது. எப்படித் தெரிந்தது? புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை நன்னாகம் நின்றுஅலரும் நல்நாடன், என்ஆகம் கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான் என்கொல் இவர்அறிந்த வாறு . (முத்தொள்ளாயிரம்) புன்னாகச் சோலை - புன்னை மரச் சோலை புனல்- நீர்  தெங்கு - தென்னை மரம் சூழ்மாந்தை- சூழ்ந்த அவன் ஊர்(மாந்தை) நன்னாகம் - நறுமண மலர்கள் அலரும் - பூத்துக் குலுங்கும் என்ஆகம் - என்னுடைய கங்குல் -இரவில் தைவந்தான்- மெல்ல வந்தான் என்கொல்-  எப்படி இவர்அறிந்த வாறு - இவர்களுக்குத் தெரியும்?

காதல் வந்ததும் பெண்ணின் உள்ளம்...

  மனதுக்குள் காதல் வந்த பின் ஒரு பெண் என்னவெல்லாம் செய்வாள்?    1. விழித்திருக்கும் போது நினைவிலும், தூங்கும் போது கனவிலும் அவனையே காண்பாள். 2. ஏதோ ஒருவகையில் அன்பை வெளிப்படுத்துவாள். 3.மனதுக்குள்ளேயே பேசிப் பார்த்துக்கொண்டிருப்பாள். 4.சாப்பிடப் பிடிக்காமல் உடல் மெலிந்து போகும். 5.அப்படி மெலிந்ததால் ஒரு சோர்வும் கூடவே இருக்கும். 6.எப்படியாவது அவனைப் பார்க்கவேண்டும் என முயற்சி செய்வாள். 7.பகல் பொழுதில் வெறுப்பு வரும். 8.இரவுப் பொழுதில் தூக்கம் வராமல் "இரவு இவ்வளவு நீண்டு கொண்டே போகிறதே" என ஒரு அவஸ்தை இருக்கும். 9.கனவில் அவனைப் பார்த்து தூக்கத்தில் உளருவாள். 10. தன் அன்பை அவனிடம் சொல்லலாமா,சொன்னால் தவறாகப் போய்விடுமோ என்று குழம்பி சொல்லாமலேயே மனதுக்குள் வெந்து மெலிந்து விடுவாள். 11. ஒருதலையாய் இப்படி பெண்ணுக்கு வரும் இந்தக் காதல் உணர்வைத் தான் கைக்கிளை என்கிறது இலக்கியம். காண்டல் , நயத்தல் , உட்கோள் , மெலிதல், மெலிவொடு வைகல் , காண்டல் வலித்தல், பகல் முனிவு உரைத்தல் , இரவு நீடு பருவரல், கனவின் அரற்றல் , நெஞ்சொடு மெலிதல், பெண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும். (புறப்பொருள் ...

Nothing lasts for ever - Sydney Shelton

  Nothing lasts for ever - Sydney Shelton மூன்று Lady doctors...Paige, Kat, Honey. அவர்களின் சிறு வயதில் ஆரம்பித்து வாழ்க்கை நெடுகச் செல்கிறது கதை. Kat,   கவர்ந்ததிழுக்கும் அழகு கொண்ட கருப்பு நிறப் பெண். மென்மையான இயல்பு.  Kat சிறிது காலம் இந்தியா வந்த போது கற்றுக் கொண்ட விஷயங்கள்... இந்தி உட்பட என கொஞ்சம் நம் மண் வாசம். Country Hospital லில் ஆரம்பித்து அங்கேயே கதை முடிவடைகிறது. சபலம் பிடித்த Ken க்கு சரியான தண்டனை.அதை நிரூபிக்க Paige எடுத்துக் கொண்ட அந்த சிரமங்கள் நமக்கும் வலியைத் தருகின்றன. Kat இறந்துவிட்டாள் என நம்ப சிரமமாக இருக்கிறது. Mike ன் நிலைக்கு வருத்தப்படவில்லை. என்றாலும் Mike தன் sister ஐ நிம்மதியாக இருக்க விடவில்லை என்பதால் ஒரு மாதிரியான கோபம் வருகிறது. Paige சிறையில் இருக்கும் போது என story ஆரம்பித்து பின்னோக்கிச் செல்கிறது. இடையில் கதை மிக மெதுவாகப் போனாலும் பின் பகுதியில் சுவாரஸ்யமாகச் செல்கிறது. Medical students படித்தால் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் . Paige ஒரு millionaire என்று கதை முடிந்து அவரை சிறையிலிருந்து விடுவிக்கிறது. நினைவில் வைத்துக்...

அப்புசாமி சீதாப்பாட்டி

   நகைச்சுவையாய் எழுதுவது சற்றுக் கடினம். கதை எழுதும் பொழுது ஆங்காங்கே - பாயசத்தில் முந்திரிப் பருப்பு போல - நகைச்சுவை மிளிர எழுதிவிடலாம்.  அல்லது, நகைச்சுவைக்கென்றே ஒரு பாத்திரத்தைஉருவாக்கி புதினம் எங்கும் நடமாட விட்டு வாசகர்களைமுறுவல் பூக்க வைக்கலாம். ஆனால், கதை முழுவதுமே நகைச்சுவையாய்க் கொண்டு செல்வது சற்றுச் சிரமம்.          பாக்கியம் ராமசாமி எழுதிய அப்புசாமி சீதாப்பாட்டி கதைகள் அந்த வகை. அதில் வரும் சில வரிகள்.          இருட்டில், யாருக்கோ பயந்துகொண்டு ஓடிவந்து, ஒரு மதில் சுவரை ஏறிக் குதித்த அப்புசாமி, மறுபக்கத்தில், சுவரோடு ஒட்டி நான்கைந்து உறைகள் பதித்து ஆழப்படுத்தி சேறும் சகதியுமாக ஒரு பெரியகிணறு இருப்பதைஅறிந்திருக்கவில்லை.        மாடு முட்டி இரண்டு கைகளும் சேதாராமாகி, வேதனையோடு அப்புசாமி ஆஸ்பத்திரியில் கிடப்பது கண்டும் நமக்கு சிரிப்புத்தான் வருகிறது.     அப்புசாமிக்கு ஒன்றும் புரியவில்லை! "பொருவிளங்காஉருண்டை மாதிரி கெட்டியாக இருந்த சீதே ஏன் இப்படி ரவா லாடு மாதிரி உதிருகிறாள்?" அப்புசா...

It's singing by herself

  Behold her, single in the field, Yon solitary Highland Lass! Reaping and singing by herself; Stop here, or gently pass! Alone she cuts and binds the grain, And sings a melancholy strain; O listen! for the vale profound Is overflowing with the sound. -William Wordsworth 

Importance of examination

Importance of examination  Life today has become so complex that examinations have come to play an important part in one’s educational career. Examinations are considered so important that most students are afraid of them. The ability to pass an examination is indeed a valuable quality. It shows that the student is able to express his thought and ideas to a manner others can understand. It also shows that the student has acquired a certain amount of knowledge in some branches of study. Besides, the mind of a student, even if he is dull, receives good exercise when he prepares for an examination. A student’s success in an examination, therefore, helps employers and others to assess his mental or general ability. Some people, however, argue that examinations test only a certain kind of skill. They say that many people have a good memory and a special ability to pass examinations and achieve brilliant results, though they have no capacity for original thought or imagination. But...

ஹைக்கூ, சென்ரியு, லிமரிக்

மூன்று வரியில் மடித்து எழுதப்பட்ட எல்லாமே ஹைக்கூ என அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் உண்மையில் ஹைக்கூவுக்கு தெளிவான விதிகள் இருக்கின்றன.அவை, 17 On (On என்பது தமிழில் அசை போல)கொண்ட மூன்று வரிகளில் இருப்பது மரபு. அந்த 17ம் முதல் வரியில் 5 ,இரண்டாம் வரியில் 7, மூன்றாம் வரியில் 5 என இருக்க வேண்டும். நிகழ்காலத்தில் மட்டுமே எழுதப்படவேண்டும்.(Present Tense).  மனித இயல்புகளைப் பற்றி ஹைக்கூவில் குறிப்பிடக் கூடாது. ஹைக்கூவின் மையஇழை என்பது கிரு(Kiru) என்று கூறப்படுகின்ற எதிர்பாராத ஒரு திருப்பத்தைக் (cutting) கொண்டிருப்பதாகும்.  இறுக்கம், தத்துவம், இயற்கை ஆகியவை ஹைக்கூவின் சிறப்பாகும். சிலம்பை  உடைத்து என்னபயன்  அரியணையிலும் அந்தக் கொல்லன். (ஈரோடு தமிழன்பன்- சூரியப் பிறைகள்) அமுதபாரதியின் புள்ளிப் பூக்கள் ,  ஐக்கூ அந்தாதி , காற்றின் கைகள் ஆகிய நூல்களும், அறிவுமதியின் புல்லின் நுனியில் பனித்துளி யும் நல்ல ஹைக்கூ கவிதைகளைக் கொண்டவை. ஹைக்கூ போலவே சென்ரியுவும் ஜப்பானியக் கவிதை வடிவம் தான். ஹைக்கூ போலவே இதிலும் மூன்று வரிகளில் அமைந்த 17 ஆன்( ஏறக்குறைய தமிழ் மொழியின் அசை போன்றது...