அறிவும் எண்ணமும் அலைபாயும்.
அதிலும் எண்ணங்கள் எண்ணமுடியாத அளவு விரிந்து கிடைப்பவை.
அவை நொடிக்கு நொடி மாறும்.
ஆனால் உறவினில் கொண்ட அன்பு இதயம் சார்ந்தது.
அது நிலையானது.
அதனால், இரவை அறிவாகவும்
பகலை உறவாகவும்
உருவகப் படுத்துகின்றன
கண்ணதாசனின் இந்த வரிகள்.
இரவுக்கு ஆயிரம் கண்கள்
பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள்
உறவுக்கு ஒன்றே ஒன்று
கணக்கினில் கண்கள் இரண்டு
அவை காட்சியில் ஒன்றே ஒன்று
பெண்மையின் பார்வை ஒரு கோடி
அவை பேசிடும் வார்த்தை பல கோடி
அங்கும் இங்கும் அலை போலே
தினம் ஆடிடும் மானிட வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும்
அது எங்கே முடியும் யாரறிவார்.
- கண்ணதாசன்
இதே அலைவரிசையில் அமைந்த
Francis William Bourdillon எழுதிய ஆங்கிலக் கவிதை இது.
The night has a thousand eyes;
And the day but one
Yet the light of the bright world dies
With the dying sun.
The mind has a thousand eyes,
And the heart but one.
Yet the light of a whole life dies
When love is done.
Francis William Bourdillon
Comments
Post a Comment
Your feedback