பொருள்
இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும்.
ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் அன்பு உணர்வை மையமாகக் கொண்டு அகப்பொருள் இலக்கணம் அமைந்துள்ளது. இதில் ஆணைத் தலைவன் என்றும் பெண்ணைத் தலைவி என்றும் கூறுவர்.
தலைவன், தலைவி என்று பொதுவாகப் பாடுவார்களே தவிர ஒருவருடைய இயற்பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை.
அகப்பொருள் பாடல்கள் நாடகப் பாங்கிலான தன்மை கொண்டிருக்கும்.
எல்லாப் பாடல்களும் தலைவன், தலைவி, தோழி முதலியவர்களில் யாராவது ஒருவர் கூறுவதாக அமைந்திருக்கும்.
ஒரே பாடலில் இருவர் அல்லது மூவர் உரையாடுவது போல இருக்காது.
ஒவ்வொரு பாடலுக்கும் திணை, துறை கூறப்பட்டிருக்கும்.
திணை, நிலம் சார்ந்த ஒழுக்கத்தைக் குறிக்கும்.
துறை என்பது பாடப்பெற்ற சூழலைக் குறிக்கும்.
அகப்பொருள் இலக்கணம் திணை அடிப்படையில் அமைந்ததாகும்.
அகப்பொருள் திணைகள் ஐந்து. அவை,
1. குறிஞ்சித் திணை
2. முல்லைத் திணை
3. மருதத் திணை
4. நெய்தல் திணை
5. பாலைத் திணை
இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று வகைப்படும். அவை,
1. முதற்பொருள்
2. கருப்பொருள்
3. உரிப்பொருள்
ஆகியன ஆகும்.
முதற்பொருள்
நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் எனப்படும்
நிலம்
ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு:
குறிஞ்சி- மலையும் மலை
சார்ந்த இடமும்
முல்லை- காடும் காடு
சார்ந்த இடமும்
மருதம்- வயலும் வயல்
சார்ந்த இடமும்
நெய்தல்- கடலும் கடல்
சார்ந்த இடமும்
பாலை- பாலை நிலமும் பாலை
நிலம்
சார்ந்த இடமும்
பொழுது
பொழுது என்பது காலம் என்று பொருள்படும். பொழுது சிறு பொழுது, பெரும்பொழுது என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சிறு பொழுது
சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும். சிறுபொழுது பின்வருமாறு அமையும்.
வைகறை- விடியற்காலம்
காலை- காலை நேரம்
நண்பகல்- உச்சி வெயில்
நேரம்
எற்பாடு- சூரியன் மறையும் நேரம்
மாலை- முன்னிரவு நேரம்
யாமம்- நள்ளிரவு நேரம்
பெரும்பொழுது
பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப்பிரிவு ஆகும்.
சித்திரை, வைகாசி- இளவேனில் காலம்
ஆனி, ஆடி- முதுவேனில் காலம்
ஆவணி, புரட்டாசி- கார் காலம்
ஐப்பசி, கார்த்திகை- குளிர்காலம்
மார்கழி, தை- முன்பனிக் காலம்
மாசி, பங்குனி- பின்பனிக் காலம்
சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவற்றை இவை இவை இந்தத் திணைகளுக்கு உரியவை என்று பிரித்து வைத்துள்ளனர்.
குறிஞ்சி- குளிர்காலம்,
முன்பனிக்காலம்- யாமம்
முல்லை- கார்காலம்-
மாலை
மருதம்- ஆறு காலமும்- வைகறை
நெய்தல்- ஆறு காலமும்- எற்பாடு
பாலை- முதுவேனில், பின்பனி- நண்பகல்
ஒவ்வொரு நிலத்திற்கும் மேலே குறிப்பிட்ட காலங்கள் சிறந்தனவாக இருக்கும் என்பதால் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது.
நிலமும் பொழுதும் ஆகிய இரண்டு முதற்பொருள்கள் அத்திணையில் உள்ள சூழலைத் தீர்மானிக்கின்றன. இவற்றின் காரணமாக ஒவ்வொரு திணையிலும் சூழல் வேறுபட்டுள்ளது. ஒவ்வொரு திணையிலும் வாழும் மக்கள், அவர்களின் தொழில், உணவு, பொழுதுபோக்கு, அந்த நிலத்தில் உள்ள மரங்கள், பறவைகள், விலங்குகள், நீர்நிலை முதலியவற்றைக் கருப்பொருள் என்கின்றனர். கருப்பொருள், பாடல்களில் பின்னணியாகச் செயல்படுகின்றது.
எடுத்துக்காட்டாகக் குறிஞ்சித் திணைக்கு உரிய கருப்பொருள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
குறிஞ்சித் திணையின் கருப்பொருள்கள்:
தெய்வம்- முருகன்
தலைமக்கள்-
வெற்பன், கொடிச்சி
மக்கள்- குறவர், குறத்தியர்
பறவை- கிளி, மயில்
விலங்கு- புலி, யானை
ஊர்- சிறுகுடி
நீர்நிலை- அருவி, சுனை
பூ- வேங்கை, குறிஞ்சி
மரம்- தேக்கு, அகில்
உணவு- மலைநெல், தினை
பறை- தொண்டகம்
யாழ்- குறிஞ்சி யாழ்
பண்- குறிஞ்சிப் பண்
தொழில்- தேன் எடுத்தல், வெறியாடல்
முல்லைத் திணையின் கருப்பொருள்கள்:
தெய்வம்- திருமால்
தலைமக்கள்-
குறும்பொறை தோன்றல்கிழத்தி
மக்கள்- ஆயர்ஆய்ச்சியர்
பறவை- காட்டுக்கோழி
விலங்கு- மான்,முயல்
ஊர்- பாடி
நீர்நிலை- குறுஞ்சுனை
பூ- முல்லை,பிடவம்
மரம்- கொன்றை,காயா
உணவு- வரகு,சாமை,முதிரை
பறை- ஏறுகோட்பறை
யாழ்- முல்லையாழ்
பண்- சாதாரிப் பண்
தொழில்- மேய்த்தல், ஏறுதழுவுதல்
மருதத் திணையின் கருப்பொருள்கள்:
தெய்வம்- இந்திரன்
தலைமக்கள்-
ஊரன்,மகிழ்நன்,மனைவி
மக்கள்- உழவர், உழத்தியர்
பறவை- நாரை,அன்னம்
விலங்கு- எருமை,நீர்நாய்
ஊர்- பேரூர்
நீர்நிலை- ஆறு
பூ- தாமரை,கழுநீர்
மரம்- காஞ்சி,மருதம்
உணவு- செந்நெல்,வெண்ணெல்
பறை- மணமுழவு
யாழ்- மருதயாழ்
பண்- மருதப்
பண்
தொழில்- நெல்அரிதல்,விழாஎடுத்தல்
நெய்தல் திணையின் கருப்பொருள்கள்:
தெய்வம்- வருணன்
தலைமக்கள்-
சேர்ப்பன், புலம்பன்,நுளைச்சி
மக்கள்- பரதவர்,பரத்தியர்
பறவை- கடல்காகம்
விலங்கு- சுறா
ஊர்- பாக்கம்
நீர்நிலை- உவர்நீர்க்கேணி
பூ- நெய்தல்,முண்டகம்
மரம்- புன்னை,ஞாழல்
உணவு- மீன்
பறை- மீன்கோட்பறை
யாழ்- விளரியாழ்
பண்- செவ்வழிப் பண்
தொழில்- மீன்பிடித்தல்,கடலாடுதல்
பாலைத் திணையின் கருப்பொருள்கள்:
தெய்வம்- கொற்றவை
தலைமக்கள்-
விடலை,மீளி,எயிற்றி
மக்கள்- மறவர்,மறத்தியர்
பறவை- பருந்து, கழுகு
விலங்கு- செந்நாய்
ஊர்- குறும்பு
நீர்நிலை- கூவல்
பூ- குரா,மரா
மரம்- உழிஞை,பாலை
உணவு- வழிப்பறி உணவு
பறை- பகைத்துடி
யாழ்- பாலையாழ்
பண்- பஞ்சுரம்ப் பண்
|
தொழில்-
வெஞ்சமம்,சூறையாடல் |
|
• உரிப்பொருள்
ஒவ்வொரு திணைக்கும் உரிய முக்கிய உணர்ச்சியைக் குறிக்க்கும் பொருளை உரிப்பொருள் என்பர். ஐந்து திணைகளுக்கும்
உரிப்பொருள் பின்வருமாறு:
குறிஞ்சி-புணர்தல்-(தலைவனும் தலைவியும் ஒன்று
சேர்தல்).
முல்லை- இருத்தல்(தலைவி, பிரிவைப் பொறுத்துக் கொள்ளுதல்)
மருதம்-
ஊடல்(தலைவனிடம் தலைவி பிணக்குக் கொள்ளுதல்)
நெய்தல்- இரங்கல்(தலைவி பிரிவுக் காலத்தில் வருந்துதல்)
பாலை- பிரிவு(தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல்)
Comments
Post a Comment
Your feedback