Skip to main content

என்னை மாதிரி நல்லவர்களும் இருக்கிறார்கள்

அவன் ஊரில் காஞ்சி மரங்கள் நிறைந்த தோட்டங்கள் இருக்கின்றன. அங்கே உள்ள வயல் வெளியில் குளம் போல நீர் நிறைந்திருக்கும்.

அந்தக் குளத்தில் உள்ள நாரைகள் மீன்ளை வாயில் கவ்விக்கொண்டு போகும்.

அப்படிப் போன ஒரு நாரையின் வாயிலிருந்து தப்பித்து, குளத்தில் விழுந்த கெண்டை மீன் அந்தக் குளத்தில் உள்ள வெள்ளைத் தாமரை மொட்டுக்களைப் பார்த்து இதுவும் நாரை என்று நினைத்துப் பயப்படும்.

உன் கணவனின் தோழனாக இருந்த ஒரு பாணன் உன்னிடம் பொய் சொல்லிவிட்டான் என்பது உண்மை தான். அதற்காக, எல்லாப் பாணனும் உன் கண்களுக்கு பொய்யர்களாகவே தெரிகிறார்கள்.

தாமரை மொக்கை நாரை என்று நினைத்து நடுங்கிய அந்த அப்பாவிக் கெண்டை மீனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்?

பொய்யர்கள் இருக்கும் இந்த பூமியில் தான் என்னைப் போல நல்லவர்களும் இருக்கிறார்கள்.

குருகுகொளக் குளித்த கெண்டை அயலது

உருகெழு தாமரை வான்முகை வெரூஉம்

கழனியம் படப்பைக் காஞ்சி யூர

ஒருநின் பாணன் பொய்ய னாக

உள்ள பாணர் எல்லாம்

கள்வர் போல்வர்நீ அகன்றிசி னோர்க்கே. 

(ஓரம்போகியார் - குறுந்தொகை 127)


சொல்லும் பொருளும்:

குருகு - நாரை

உரு - தோற்றம் / நிறம்

கெழு - பொருந்திய

வான் - வெண்மை

முகை - மொட்டு

வெரூஉம் - அஞ்சும்

கழனி - வயல்

படப்பை -தோட்டம்

காஞ்சி -காஞ்சி மரம்

அகன்றிசினோர் - கணவனைப் பிரிந்து தனித்திருப்பவர்கள்


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...