Skip to main content

கேள்வி பிறக்கட்டும்!


வினாக்கள் இல்லையென்றால் அறிவு வளர்ச்சி சாத்தியமில்லை.

ஒரு கேள்வி மனதுக்குள் வரும் போதே ஆர்வமும் கூடவே வந்துவிடுகிறது.
பார்ப்பதெல்லாம் அதிசயமாகத் தோன்றுவதால் தான் குழந்தைகள் துறுதுறுவென்றிருக்கின்றன. அதன் வெளிப்பாடாகவே குழந்தைகள் எப்போதும் எதையாவது ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. 

அந்தக் கேள்வி கேட்கும் ஆர்வம் எப்போதும் மழுங்கடிக்கப்படாமல் பார்த்துக் கொண்டால் அந்தக் குழந்தை அறிவில் சிறந்த குழந்தையாகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

யார் அப்படி மழுங்கடிக்கிறார்கள்?

அந்தத் தவறு ஆசிரியர்களால் தான் பெரும்பாலும் நடக்கிறதாம். அடுத்து அந்தக் குழந்தைக்கு அப்படி முட்டுக்கட்டை போடுபவர்கள் வேறு யாருமில்லை. அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் தான்.

"ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள ஆறு பேர் வேண்டும். அந்த ஆறு பேர் WHAT, WHY, WHEN , HOW, WHERE AND WHO" என்று சொல்லுவார் Rudyard Kipling.  

I keep six honest sering men;
They taught me all I know;
Their names are What and Why and When
And How and Where and Who.
-Rudyard Kipling.  


எப்பொருளும் என்னெஞ்சம் ஏற்க உணர்த்தியவர்
இப்புவியில் தொண்டர் இருமூவர்- எப்பொழுது
யார் எங்கே இருக்கிறார்கள் ஏன் என்ன எப்படி என்கின்ற
பேர்கொண்டார் அன்னவரைப் பேணு.

என்பது அதன் தமிழ் வடிவம். 

தமிழ் இலக்கண நூல் நன்னூல் இதை வேறு மாதிரிச் சொல்லும்.

அறிவறி யாமை ஐயுறல் கொளல்கொடை
ஏவல் தரும்வினா ஆறும் இழுக்கார்.
(நன்னூல் நூற்பா 385)

புதிய செய்திகள், புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய வாய்ப்புகள், புதிய பாடம், புதிய முயற்சி, புதிய விளையாட்டு என பல வழிகளில் அந்த ஆறு பேரும் ஒரு குழந்தையோடு வந்து சேர்வர். 

எந்த வழிகளிலெல்லாம் கேள்விகள் வர வாய்ப்பிருக்கிறதோ அத்தனை வாய்ப்புகளையும் அடைத்துவிட்டு அறிவைப் புகட்ட நினைப்பது சாத்தியமில்லை என்பது தெரியும். 

ஆனாலும் 'மண்ணில் விளையாடக் கூடாது' தொடங்கி 'தொடாதே உடைத்து விடுவாய் ' வரை நாம் சொல்லும் ஒவ்வொரு அறிவுரையும் வினாக்களை கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தைகளை விட்டு விரட்டியடித்து விடுகின்றனவாம்.

காயங்கள் எதுவும் இல்லாமல் குழந்தைப் பருவத்தைக் கடந்து போகும் குழந்தைகளை விட விழுந்து எழுந்து ஓடிப் பழகும் குழந்தைகள் தான் வெற்றியாளர்கள் ஆகிறார்கள் என்பதை அறியாமல் இல்லை.

ஆனாலும் நாம் அப்படியே தான் இருக்கிறோம்.

கேள்விகள் என்பது அறிந்துகொள்ளும் ஆர்வம். கேள்விகள் தீரும்போது மந்தநிலை வந்துவிடுகிறது.



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...