Skip to main content

அழுகிய முட்டையும் சுவை தான்

 ஆபீசிலிருந்து வீடு திரும்பிய கணவனுக்கு ஆசை ஆசையாக காபி டம்ளரைக் கையில் கொடுத்துவிட்டு தானும் குடிக்கத் தொடங்கினாள் மனைவி.


காப்பி டேஸ்ட்டாக இல்லை எனத் தோன்றியது அவளுக்கு.


 அவனிடம் கேட்டாள்,"காப்பி நல்லா இருக்கா?".


 "ஆமாம்" என்றான் அவன்.


 மறுபடியும் வற்புறுத்திக் கேட்டாள். 

"நீங்க பொய் சொல்றீங்க, நான் வருத்தப்படுவேன்னு".


 "இல்லை, நல்லாதான் இருக்கு" என்றான் அவன்.


"சரி  நம்பறேன். இன்னும் என்ன செய்திருந்தால் காபி இன்னும்  டேஸ்டா இருந்திருக்கும்"


அவன் சொன்னான்.


"கொஞ்சம் தண்ணீரைக் குறைத்திருந்து கொஞ்சம் கூடுதலாகக் காப்பித்தூள் போட்டு, கூடக் கொஞ்சம் சர்க்கரையும் போட்டு இன்னும் கொஞ்சம் சூடாகவும் இருந்திருந்தால் இன்னும் டேஸ்டாக இருந்திருக்கும்".


சாப்பிடும் முன் அல்லது காபி, டீ போன்றவற்றைக் குடிக்கும் முன் நாம் மனதில் ஒரு சுவையைக் கற்பனை செய்து வைத்திருப்போம். எவ்வளவுதான் தான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் நாம் நினைத்து வைத்திருக்கும் சுவை சில நேரங்களில் இல்லாமல் போய்விடும். 


அப்போது நமக்கு இரண்டு வழிகள் இருக்கும்.


ஒன்று,  சுவை என்ன சுவை அதைக் கஷ்டப்பட்டுச் செய்தவர்களின் மனது தான் முக்கியம் என்று நினைக்கலாம்.


இரண்டாவது, யார் மனது எப்படி வருத்தப்பட்டால் எனக்கென்ன? எனக்குச்  சுவை தான் முக்கியம் என்று நினைக்கலாம். 


சுவையாக இல்லாத போதும் அதில் எது நல்ல விஷயமோ அதைச் சொல்ல ஒரு நல்ல பண்பு வேண்டும்.  


இப்படி நல்ல கெட்ட விஷயங்களைப் பக்குவமாக சொல்வதை curate's egg என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.


 கோழி முட்டை, குருவி முட்டை தெரியும்.

அது என்ன curate's egg ?


curate's egg  என்ற இந்தப் பயன்பாடு ஒரு கார்ட்டூன் படத்திலிருந்து வந்தது.


இந்த கார்ட்டூனில் ஒரு பிஷப்பும் ஒரு பாதிரியாரும் இருப்பார்கள்.


அந்த பிஷப் பாதிரியாருக்கு ஒரு முட்டையை தட்டில் வைத்து கொடுப்பார். கொடுத்த பின்பு  அந்த முட்டை அழுகிய முட்டை போல இருப்பதாக பிஷப்புக்கு ஒரு சந்தேகம்.

அவர் உடனே அந்த பாதிரியாரிடம் கேட்பார் "முட்டை கெட்டுப் போனது போல  தோன்றுகிறதே" என்று.


அது அழுகிய முட்டை தான் என்று சொன்னால் பிஷப் வருத்தப்படுவார் என்று நினைத்த பாதிரியார் "முட்டைக்கு என்ன அழகாக இருக்கிறது. அதில் சில பகுதி சாப்பிட முடிவதாகவும்   இருக்கிறது" என்று பதில் சொல்வார். 


அந்தப் பாதிரியார் சாப்பிட்டு முடித்த பாதி  அழுகிய முட்டையைத்  தான் Curate's egg என்பார்கள். 


Curate என்றால் பாதிரியார்.


இந்தக் கார்ட்டூன் படம் பத்தொன்பதாம் நூற்றாண்டில்  பஞ்ச் பத்திரிக்கையில் (Punch) வந்தது. ஜார்ஜ் முரியர் என்பவரால் வரையப்பட்ட கார்ட்டூன் படம் அது. 

Punch magazine கார்ட்டூன்கள் உலகப் புகழ் பெற்றவை. 


உப்பு கொஞ்சம் குறைந்தால் கூட தட்டைத் தள்ளிவிட்டுக் கை கழுவிக்கொண்டு போகும் சிடுமுஞ்சியாக நாம் இருந்தால்  இந்த அழுகிய முட்டைக்குப் பின் உள்ள அன்பும் பக்குவமும் புரிவதற்கு வாய்ப்பில்லை தானே?



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...