Skip to main content

அந்தத் திறமை ஏன் ஆண்களுக்கு இல்லை?

 

சீதை அசோகவனத்தில் சிறைப் பட்டுக் கிடக்கிறாள். 


அவள் நினைவாகவே உள்ள ராமன் துக்கப்பட்டு நிற்கிறான். 


சீதையைத் தேட வாக்குத்தந்த 

சுக்கிரீவனோ மது மயக்கத்தில் மூழ்கிக் கிடக்கிறான். போதைப் பழக்கம் உள்ளவர்களிடம் அவ்வளவு தான் பொறுப்புணர்ச்சி இருக்கும் போல. 


மதுக் கொண்டாட்டத்தில் ஆழ்ந்து கிடக்கும் சுக்கிரீவனுக்குப் புத்தி புகட்டப் புறப்படுகிறான் லட்சுமணன். 


நெஞ்சில் கனல் எரிய, கோபம் கொப்பளிக்க, வில்லை எடுத்துக்கொண்டு புயலாகப் புறப்பட்டு சுக்ரீவன் அரண்மனையை அடைகிறான். 


அடக்க முடியாத ஆத்திரத்தில் அவன் கோட்டைக்கதவை காலால் உதைத்து உடைத்துவிட்டு சீறிக்கொண்டு உள்ளே நுழைகிறான். கண்கள் சுக்ரீவனைத் தேடி அவனுக்கு முன்பாக விரைகின்றன.


அப்போது திடீரென்று சுக்ரீவன் மனைவி தாரை தன் தோழிகளோடு எதிரே வருகிறாள். 


கொலை வெறியோடு வந்த லட்சுமணன் பெண்களை எதிரே பார்த்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகிறான். 

 

ருத்ரதாண்டவமாடும் அவன் கால்கள் நிற்பதற்கே தடுமாற, தன் வில்லை நிலத்தில் ஊன்றி அதன் ஆதரவில் நிற்கிறான். 


லட்சுமணன் நிற்கும் அந்தக் கோலத்துக்கு கம்பன் சொல்லும் ஓர் அழகான உதாரணம் இது.


அப்போது தான் திருமணம் முடிந்த புது மாப்பிள்ளை தன் மனைவியைத் தனியே சந்திக்க ஆவலாக அவள் அறைக்குள் போகும்போது அங்கே அவன் மாமியார், சின்ன மாமியார் கூட இன்னும் சில பெண்கள் எல்லாம் இருந்தால் அவன் எப்படி அங்கேயும் நிற்க முடியாமல் திரும்பிப்போகவும் முடியாமல் நிற்பானோ அப்படி நின்றான் லட்சுமணன்.


உண்மையில் கம்பன் காட்டியது லட்சுமணனின் நிலை மட்டும் அல்ல; அது ஒரு அழகான உளவியல். 


பிரச்னைகளை எப்போதும் போராடித் தான் தீர்வு காண வேண்டும் என்பதில்லை. பிரச்னைகளை அது ஒரு பிரச்சனையாக உருவெடுக்கும் முன்பே ஒன்றுமில்லாமல் செய்துவிடுதல் ஒரு வகையான திறமை. அந்தத் திறமை ஆண்களை விட பெண்களுக்கு இயல்பாகவே அதிகம் போல. அதனால் தான், எல்லா முக்கியமான அலுவலகங்களிலும் வரவேற்பு, மக்கள் தொடர்புப் பணிகளில் ஆண்களை விட அதிகம் பெண்களே இருக்கிறார்கள். 


ஒரு சரியான புன்னகையின் முன் கோபம் தடுமாறிப் போகிறது. வெட்கத்தில் தலை சாய்க்கும் பெண்ணின் முன் வீரம் நிற்கமுடிவதில்லை.


தாமரை வதனம் சாய்த்து,

    தனுநெடுந் தரையின் ஊன்றி,


மாமியர் குழுவின் வந்தான்

    ஆம் என, மைந்தன் நிற்ப,


பூமியில் அணங்கு அனார்தம் பொது       இடைப் புகுந்து, பொன்தோள்


தூமன நெடுங்கண் தாரை,

  நடுங்குவாள், இனைய சொன்னாள்.


சொல்லும் பொருளும் :


தாமரை வதனம் சாய்த்து - தாமரை போன்ற முகத்தைச் சாய்த்து

தனு - வில் 

வந்தான் ஆம் என -வந்ததைப் போல

மைந்தன் நிற்ப - அந்தப் பையன் (இலக்குவன்) நிற்க

பூமியில் - பூமியின் மேல்

அணங்கு அனார் தம் - தேவதை போன்ற பெண்களின்

பொது இடைப் புகுந்து - நடுவில் இருந்து

பொன்தோள் - பொன் போன்ற தோள்களைக் கொண்ட

தூமன - தூய மனத்தைக் கொண்ட

நெடுங்கண்  - நீண்ட கண்களைக் கொண்ட  

நடுங்குவாள் - நடுங்கிக் கொண்டு

இனைய சொன்னாள் - இவ்வாறு சொன்னாள்.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...