Skip to main content

ஆவுக்குப் பிச்சை ஆட்டுக்குப் பிடுங்கல்


யாரெல்லாம் ஆடு, மாடு வளர்க்கலாம். தனக்கென தோட்டம் இருப்பவர்கள் பசு மாடுகள் எருமைகள் இவற்றையெல்லாம் வளர்ப்பார்கள். விளைச்சல் நன்றாக இருக்கின்ற காலத்தில் கிடைக்கின்ற தீவனங்களை எல்லாம் பத்திரப்படுத்தி மேய்ச்சலுக்கு ஒன்றும் இல்லாத நாட்களில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இப்படியாக தோட்டம், காடு இருப்பவர்கள் தங்கள் கால்நடைகளை பட்டினியில் இருந்து காப்பாற்றி பக்குவமாய் வளர்த்து விட முடியும். 


தோட்டம் எதுவும் இல்லாதவர்கள் பெரும்பாலும் வெள்ளாடு வளர்ப்பார்கள். பொதுப் பாதைகளிலும் இட்டேரி, இடைக்குறை நிலங்களிலும் உள்ள புல் புதர்களில் மேய விட்டு ஆடுகளை வளர்ப்பார்கள்.


 அப்படி ஆடு வளர்க்கும் அவர்களும் பிழைக்க அப்போதெல்லாம் முட்புதர்கள் கொண்ட வாழ்வேலி எல்லா நிலத்திலும் இருக்கும். விளைச்சலுக்கு கெடுதல் தரும் பூச்சி புழுக்களைத் தின்று வாழும் குருவிகள், பறவைகள், பாம்பு, பல்லி, இவையெல்லாம் அங்கு தங்கி வாழ போக்கிடமாக இருக்கும். அந்த வேலிகள் தான் தனக்கென நிலமில்லாதவர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கும் வயிறு நிரப்பும். 


எந்தத் தோட்டத்தில் வேலைக்குச் செல்வார்களோ அந்தத் தோட்டத்தில் உள்ள வேலிகள், மரம், கொடிகளில் இலை, தழைகளை உரிமையோடு கொண்டு செல்வார்கள். அதை அந்த நிலத்துக்காரர்களும் அனுமதித்தார்கள். 


அதே நேரம் வேலிகள், மரங்களைச் சேதப்படுத்தாமல் இருக்க அரிவாள், கொடுவாள் போன்றவற்றைப் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை. அதற்கு மாற்றாக ஒரு நீண்ட மூங்கில் குச்சியின் ஒரு  முனையில் கொக்கி போன்ற அமைப்பை உருவாக்கிப் பயன்படுத்துவர். அதை சல்லைக் கொக்கி என்பார்கள். சுருக்கமாக சல்லை என்று சொல்வார்கள். 


தரையில் நின்று சல்லை எட்டும் வரை உள்ளவற்றையெல்லாம் பறித்துக் கொள்வார்கள். அது லக்ஷ்மணன் ரேகை போல ஒரு கட்டுப்பாட்டோடு கையாளப்பட்டது. 


நாளடைவில் தரையில் இருந்து பறித்த பின், அது போதவில்லை என்றால் மரத்தின் மீது ஏறி நின்று கொக்கியைப் பயன்படுத்தினர். 


தோட்டம் வைத்திருப்பவர்கள் கூட வறட்சிக் காலங்களில் தங்கள் கால்நடைகளுக்கு தீனி இல்லாமல் தவிப்பார்கள். ஆனால் கையில் சல்லைக் கொக்கியை எடுத்துக்கொண்டு புறப்படுபவர்கள் எப்போதும் வெறுங்கையோடு திரும்புவதில்லை. ஏனென்றால் வெறுங்கையோடு திரும்பினால் வீட்டில் இருக்கும் அந்த வாயில்லா ஜீவன் பட்டினியாய் அல்லவா கிடக்கும். 


அதனால், சல்லைக் கொக்கியைக் கையில் எடுத்தவுடன் பார்ப்பதெல்லாம் பறிப்பதற்காகவே என்பது போலவே தோன்றும். 


வருவது வரட்டும் என்பது போல தழை பிடுங்குவதிலேயே அவர்கள் கவனமெல்லாம் இருக்கும். ஆங்கிலத்தில் இந்த மனோபாவத்தை சல்லைக் கொக்கி மனோபாவம் என்ற பொருளில் By hook or by crook என்று சொல்வார்கள். Hook என்றால் கொக்கி. crook என்றால் கொக்கியோடு கூடிய நீண்ட குச்சி.


எப்படியாவது தன் வேலையைச் செய்துமுடித்து விடுபவர்களை hook or by crook அடைமொழியோடு சொல்வார்கள்.


If you give a task to him, he will get it done by hook or by crook. 


அவனிடம் அந்த வேலையை கொடுத்தால் என்ன செய்தாவது முடித்து விடுவான் என்பதெல்லாம் அந்த சல்லைக் கொக்கிக்குப் பின் உள்ள சரித்திரம். 


ஆவுக்கு (பசு மாட்டுக்கு) தண்ணீர் வேண்டும் என்றால் கூட பிச்சை எடுக்கக்கூடாது என்று தமிழ் இலக்கியம் சொல்லும். ஆனால் ஆட்டுக்குத் தழை இல்லை என்றால் பிச்சை எல்லாம் எடுக்கமாட்டார்கள். பிடுங்கிக் கொண்டு போய்விடுவார்கள். சல்லைக் கொக்கியில் தான். 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...