Skip to main content

வார்த்தைகளில் வசிக்கிறீர்கள்- Kahlil Gibran...On Talking

 எங்களுக்குப் பேச்சைப் பற்றிக் கூறுஎன்று ஒரு அறிஞன் கேட்டான்

 அவன் பதில் சொல்லத் தொடங்கினான்

 உங்கள் எண்ணங்களோடு நீங்கள் அமைதியாக இருக்க முடியாத போது தான் நீங்கள் பேசுகிறீர்கள்.

 உங்கள் இதயத்தோடு தனிமையாக உங்களால் இருக்க முடியாத போதுநீங்கள் வார்த்தைகளில் வசிக்க ஆரம்பிக்கிறீர்கள்.

வார்த்தைச் சத்தத்தால் இதயத்திலிருந்து உங்களை இடம் மாற்றுகிறீர்கள்

அதிகமாகப் பேசிப்பேசி உங்கள் எண்ணங்களை குத்திக் கிழித்துவிடுகிறீர்கள்

சிந்தனை..... அது வானம்பாடி

உங்கள் வார்த்தைக் கூண்டுகளில் அது சிறகை விரித்தாலும் பறக்க முடிவதில்லை

உங்களது தனிமையோடு இருக்கப்  பயந்து கொண்டே நீங்கள்  பேசுபவர்களைத் தேடிப் போகிறீர்கள்

மௌனத்தில் உங்களின் உள்மனம் உங்களை உரித்துப் பார்க்கிறது.  அதனாலேயே தப்பித்து ஓடுகிறீர்கள்

தமக்கே புரியாத உண்மைகளை பலர் வார்த்தைகளில் வடித்தெடுக்கிறார்கள்.

 உண்மைகளைப் புரிந்துகொண்ட சிலரோ அவற்றை வார்த்தைகளால் வரவழைப்பதில்லை.

இந்தச் சிலரின் இதயங்களில் தான் ஆன்மா வீற்றிருக்கிறது.

பாதையில் பார்க்கும் நண்பனோடு பேச உங்களின் ஆன்மா  தடுகளை அசைத்து வார்த்தைகளுக்கு வழியமைக்கட்டும்.

உங்களின் குரலின் குரல் அவனது செவியின் காதுகளில் பேசட்டும்

கோப்பைகளின் வண்ணம் மறந்து போகலாம்;  கோப்பைகளே கூட காணாமல் போகலாம்.  நாக்கு கோப்பையை அல்ல; பழச்சுவையைத் தான் நினைவில் வைத்திருக்கும்

ஆன்மாவும் அப்படித்தான் உங்கள் உள்ளத்து உண்மையின் ஓசையைத்தான் நினைவில் வைத்திருக்கும்

 

And then a scholar said, "Speak of Talking."

 And he answered, saying:

You talk when you cease to be at peace with your thoughts;

And when you can no longer dwell in the solitude of your heart you live in your lips, and sound is a diversion and a pastime.

 And in much of your talking, thinking is half murdered.

For thought is a bird of space, that in a cage of words many indeed unfold its wings but cannot fly.

There are those among you who seek the talkative through fear of being alone.

The silence of aloneness reveals to their eyes their naked selves and they would escape.

And there are those who talk, and without knowledge or forethought reveal a truth which they themselves do not understand.

And there are those who have the truth within them, but they tell it not in words.

 In the bosom of such as these the spirit dwells in rhythmic silence.

When you meet your friend on the roadside or in the market place, let the spirit in you move your lips and direct your tongue.

Let the voice within your voice speak to the ear of his ear;

For his soul will keep the truth of your heart as the taste of the wine is remembered.

 When the colour is forgotten and the vessel is no more.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...