Skip to main content

அம்மா, அப்பா கடைசியாக எதற்காகப் பாராட்டினார்கள்?


எம். இலக்கியா.
V-B

                        நான் கடைவீதிக்குச் சென்று வந்தேன்அங்கு பூச் செடிகளைப் பார்த்தேன்எனக்கு மிகவும் பிடித்த ரோஜா செடியை வாங்கிக் கொண்டேன்.

            பின்பு வீட்டிற்கு வந்தேன்.  அதைப் பார்த்து அம்மா என்னைப் பாராட்டினார்கள்நானும் மகிழ்ச்சி  அடைந்தேன்.

 

K.N. மிருதுளா II-B

 எனது பெயர் மிருதுளாசமீபமாக எனது அம்மாவும், எனது அப்பாவும் நான் நன்றாக விளையாடியதற்காகப் பாராட்டினார்கள். எனக்கு ட்டப்பந்தயம் மிகவும் பிடித்த விளையாட்டு. அதில் ஓடி வெற்றி பெற்றமைக்காகப் பாராட்டினார்கள்.

அம்மாவுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்தமைக்காகப் பாராட்டினார்கள்.

நான் நன்றாக படித்தமைக்காகவும் பாராட்டினார்கள்.

நன்றி.

 

M.S. இந்திரபிரசாத் II – B

            நான் ஓவியம் அழகாக வரைந்ததற்காக என் தந்தை என்னைப் பாராட்டினார்கள்மிகவும் சந்தோசமடைந்தேன்.

 

மித்ரா ஸ்ரீ

 

            அப்பாவுடன் இன்று எங்களுடைய நான்கு சக்கர வாகனம் சுத்தம் செய்ய உதவி செய்தேன்(கார்). அப்பா என்னைப் பாராட்டினார்கள்.

            எனது வீட்டை சுத்தம் செய்ய உதவி செய்தேன். அதற்கு என் அம்மா என்னைப் பாராட்டினார்கள்.

 

எஸ். ஹர்சிதா III – A

    இன்று மதியம் என் அப்பா சாப்பிட வீட்டிற்கு வந்தார்கள். சாம்பார் சாப்பிட்டதும் தயிர் எங்கே என்று கேட்க, அம்மா வீட்டில் தயிர் இல்லை என்றதும் நான் கடைக்கு ஓடிச்சென்று தயிர் வாங்கி வந்ததும் என்னை மிகவும் பாராட்டினார்கள். தேவை அறிந்து உதவி செய்ததால் மகிழ்ந்தனர்.

. அணுக்கிரித்தா 

            எனது வகுப்பின் சிறந்த கையெழுத்தில் நான் தேர்வாகி சான்றிதழ் பெற்றதற்காக என் அம்மா, அப்பா சென்ற வாரம் என்னைப் பாராட்டினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

 SELVA NITHISH  

            சிறந்த கையெப்பம் சான்று வாங்கியதற்கு அம்மா, அப்பா பாராட்டு தெரிவித்தனர். இந்த மாதிரி பாராட்டு அம்மா, அப்பாவிடம்  வாங்க நான் நன்றாக எழுத, படிக்க, மேலும் முயற்சி செய்து வருகின்றேன். இந்த பாராட்டுக் கிடைக்கக் காரணமாக இருந்த வகுப்பு ஆசிரியைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

 SWATHI KRISHNA.B, III - A

            அன்று ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தனர். அப்பொழுது அனைவரும் என்னைப் பாட்டுப் பாடுமாறு கேட்டனர். எனவே நான் அங்கு இருந்த அனைவருக்கும் பிடித்த பாடலான கண்ணான கண்ணே பாடலைப் பாடினேன்.

             எம் விருந்தினர்கள் அனைவரும் பாட்டை இரசித்து கேட்டனா.; பாராட்டினர். என் பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். என்னைப் பாராட்டி வாழ்த்தினர்.

.. ஸ்ரீகாரணி, 4 A

             நான் வகுப்பில் கையெழுத்துக்கு சான்றிதழ் பெற்றதற்காக  எனது ஒருங்கிணைப்பாளர் பாராட்டினார்அப்பொழுது எனது அம்மா, அப்பாவுக்கு மிகுந்த மகிழ்ச்சிஎன்னைப் பாராட்டினார்கள்இதை என்றும் நான் மறவேன்இன்னும் எனது அம்மா, அப்பாவிற்கு பெருமை சேர்க்கும் அளவுக்கு நான் நடப்பேன்கையெழுத்து மட்டுமல்ல படிப்பிலும் நல்ல  மதிப்பெண் வாங்கி நான் எனது அம்மா, அப்பாவிற்கு பெருமை சேர்ப்பேன் என நான் மகிழ்ச்சியோடு தெரிவிப்பதில் எனக்கு மிகப்பெரிய  ஆனந்தம்.

                                                                                                                     

. ரிதன் V – A  

            அம்மா, அப்பா  நான் ஓவியம் வரைந்ததற்குப் பாராட்டினார்கள்.

  

SAMYUKTA SHIVANI.S, V-A

            நான் அலகுத் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்ததால் அம்மா, அப்பா பாராட்டினார்கள்.


 சு. சித்தார்த் ஆதிரையன் V –  B

       என்னுடைய அப்பா நான் செய்த  Blue Day Project- க்கு பாராட்டினர்.

சே. லுக்மான் IV

        அப்பா, அம்மாவிடம் நான் ஆங்கில எழுத்துப் பயிற்சி நோட்டைக் காட்டினேன்அதனைப் பார்த்து விட்டு என் அப்பாவும் அம்மாவும் அழகாக இருக்கிறது என்று என்னைப் பாராட்டினார்கள்அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.

 

. தீபிகா IV – A

            என் அம்மா, அப்பா நான் வகுப்பில் முதல் இடம் வந்ததால் என்னைப் பாராட்டினார்கள்நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன்.

 

SRISIVAASHINI.G.V,  V-A        

                        என் அம்மா கடந்த வாரம் எங்கள் வீட்டிற்கு வந்த உறவினர்களிடம் நான் மரியாதையாகவும்,  அம்மாவிற்கு  உதவியாகவும் இருந்ததற்காக  என்னைப் பாராட்டினார்கள். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...