மே 1, 1895
பால்டி மோரில் முதல் மின்சார ரயில் பயணிகளுக்காக விடப்பட்டது.
மே 1,1897
கல்கத்தாவில் சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.
மே 1, 1917
சிறந்த முறையில் பொதுசேவை புரியும் பத்திரிகைகள், பத்திரிகைகளின் பல்வேறு துறைகளில் சிறந்த தொண்டாற்றியவர்கள், நாவல், நாடகம், அமெரிக்க வரலாறு, வாழ்க்கை வரலாறு, கவிதை, இசை முதலான ஆறு துறைகளிலும் சிறந்த படைப்பு ஆகியவற்றிற்காக ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கும் திட்டம் கொலம்பியா பல்கலைக்கழகத்தினால் இன்று தொடங்கப்பட்டது.
மே 1,1960
பம்பாய் மாநிலம் மொழி வழியாக பிரிக்கப்பட்டு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் இன்று உருவாக்கப்பட்டன.
மே 1,1965
திருச்சியில் கனரக கொதிகலன் சாலை துணை ஜனாதிபதி ஜாகிர் உசேனால் இன்று திறந்து வைக்கப்பட்டது
மே 1,1993
மே தினத்தை ஒட்டி இலங்கை ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு நகரில் ஒரு ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது அந்த ஊர்வலத்துக்கு இலங்கை அதிபர் பிரேமதாசா தலைமை தாங்கி ஒரு ஜிபில் சென்றார் அப்போது நகரின் மையப்பகுதியான ஆர்மர் தேர்வில் பகல் 12 45க்கு ஊர்வலம் வந்து கொண்டிருக்கும் போது இடுப்பை சுற்றி வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு சைக்கிளில் வந்த தற்கொலை படைத் தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்தான் இதில் பிரேமதாசாவும் அவரது மெய் காவலர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
மே 1,2024
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன்,உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
இசைக்கலைஞர் ஏவி ரமணனின் இசைக் குழுவில் பாடி வந்த உமா பின்னர் ரமணனையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
1978ல் கிருஷ்ணலீலை படத்தில் இடம் பெற்ற மோகனக்கண்ணன் என்ற பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார்.
உமா ரமணன் பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள் ...
பூங்கதவே தாழ் திறவாய்... - நிழல்கள்
ஆனந்த ராகம்... - பன்னீர் புஷ்பங்கள்
பூபாளம் இசைக்கும்... - தூரல் நின்னு போச்சு
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு... - மெல்ல பேசுங்கள்
கஸ்தூரி மானே... - புதுமைப் பெண்
நீ பாதி நான் பாதி... - கேளடி கண்மணி
ஆகாய வெண்ணிலாவே... - அரங்கேற்ற வேளை
பொன் மானே கோபம் ஏனோ... - ஒரு கைதியின் டைரி
கண்மணி நீ வர காத்திருந்தேன் - தென்றலே என்னை தொடு
ஏலேழம் குயிலே... - பாண்டி நாட்டு தங்கம்
பூத்து பூத்து குலுங்குதடி... கும்பக்கரை தங்கையா
பூங்காற்று இங்கே வந்து... வால்டர் வெற்றிவேல்
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே... - நந்தவன தேரு
அமுதே தமிழே அழகிய மொழியே... - கோயில் புறா
ஆறும் அது ஆழமில்ல... - முதல் வசந்தம்


Comments
Post a Comment
Your feedback