அமெரிக்க முன்னால் அதிபர்
ஆபிரகாம் லிங்கன் தனது மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் ஒவ்வொரு ஆசிரியராலும் படிக்கப்பட
வேண்டிய ஒன்று.
பொறாமை அவன் மனதை அண்டாமல்
கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
எதற்கெடுத்தாலும் பயந்து
ஒடுங்கிப்போவது , கோழைத்தனம் என புரியவையுங்கள்.
புத்தகங்கள் என்ற அற்புத
உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடிலா
அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
வானில் பறக்கும் பட்சிகளின்
புதிர்மிகுந்த அழகையும்,சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும் ,பசுமையான
மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்கக் கற்றுத்தாருங்கள்.
ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது
என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட,
சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
மென்மையான மனிதர்களிடம்
மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனைத் தயார்படுத்துங்கள்.
அனைத்து மனிதர்களின் குரலுக்கும்
அவன் செவிசாய்க்க வேண்டும் என அறிவுறுத்துங்கள் .எனினும் உண்மை எனும் திரையில் வடிகட்டி
நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
கண்ணீர் விடுவதில் தவறில்லை
என்றும் அவனுக்கு புரியவையுங்கள்.
போலியான நடிப்பைக் கண்டால்
எள்ளிநகையாடவும், வெற்றுப் புகழுரைகளைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப்
பயிற்சி கொடுங்கள்.
அவனைக் கனிவாக நடத்துங்கள்.
அதிக செல்லம் கொடுத்து உங்களைச் சார்ந்திருக்க செய்ய வேண்டாம்.
சிறுமை கண்டால் கொதித்தெழும்
துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை தன்மையாக வெளிப்படுத்தும்
பொறுமையையும் அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.
இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்.
இதில் உங்களுக்குச் சாத்தியமானதையெல்லாம்
கற்றுக்கொடுங்கள்.
அவன் மிக நல்லவன். என்
அன்பு மகன்.
இப்படிக்கு,
ஆபிரஹாம் லிங்கன்.
(முழுக் கடிதத்தையும் இங்கு தரவில்லை. கடிதத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே இங்கு தமிழில் தரப்பட்டுள்ளது. ஆங்கில மூலத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்)
Comments
Post a Comment
Your feedback