Skip to main content

ஜனவரி 6

ஜனவரி 6, 1847: 

இசை மேதை தியாகராஜ சுவாமிகள் மறைந்த தினம். 

ஜனவரி 6 1852 

கண் பார்வையற்றவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்து கொள்வதற்காக ரபிகிராபி (Raphigraphy) என்னும் புள்ளி வடிவமை எழுத்து முறையை உருவாக்கிய லூயிஸ் பிரெய்லி இன்று மரணமடைந்தார்.

லூயிஸ் பிரெய்லி பிரெஞ்சு நாட்டில் பிறந்த ஒரு பார்வையற்றவர். தான் பார்வையற்ற நிலையில் இவர் உருவாக்கிய  பிரெய்லி எழுத்து முறை இன்று உலகில் உள்ள பார்வை இல்லாதவர்களையும்  படிப்பாளிகளாக்கி வருகிறது.  

ஜனவரி 6 1883

இலக்கிய உலகில் என்றும் நினைவு கூரப்படும்   கலீல் ஜிப்ரான் இன்று தான் பிறந்தார். லெபனானில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து உலகமெங்கும் புகழ்பெற்ற  கவிஞரானவர் ஜிப்ரான்

 ஜனவரி 6 1884 

மரபியலின் தந்தை என்று போற்றப்படுகின்ற கிரிகோரி ஜான் மெண்டல் இன்று காலமானார்.



 ஜனவரி 6 1997 

கவிஞர் பிரமிள் மறைந்த நாள். 

பிரமிள் என்பது புனைபெயர்.  தருமு சிவராம் என்பது தான் இவர் பெயர். அதுவும் கூட அவரது உண்மையான பெயர் ஆகாது. சிவராமலிங்கம் என்ற இயற்பெயரை  தருமு சிவராம் என்று மாற்றிக்கொண்டவர். இலங்கையில் பிறந்தவர்.  புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படும் இவர் தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர் என்று பலவாறு முத்திரை பதித்தவர்.

ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...