Skip to main content

ஜனவரி 5

 ஜனவரி 5, 1900 

சுதேசமித்திரன் நாளிதழாக வெளிவர ஆரம்பித்தது. இப் பத்திரிக்கை முதன்முதலாக ஜி.சுப்பிரமணிய ஐயரால் 1882 ஆம் ஆண்டு வார இதழாகத் துவக்கப்பட்டது.



 ஜனவரி 5,1909 

எவர்செட் விளைவு இன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜான் எவர் செட் என்பவர் தமிழ்நாட்டில் கொடைக்கானல் வான் ஆய்வுக்கூடத்திலிருந்து சூரியனை ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது சூரியப்புள்ளிகளைச் சுற்றி மிகப் பிரமாண்டமான வளியச் சுழல்கள் சுழன்று இயங்குவதைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு அங்கு சலவைக் கல்லில் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. அவர் கண்டுபிடித்த இந்தக் கண்டுபிடிப்பு தான் அவர் பெயரில் எவர்செட் விளைவு என்று குறிப்பிடப்படுகிறது.

 ஜனவரி 5,1927 

கலிபோர்னியாவில் பிறந்த ஒரு அமெரிக்கர் இந்து மாதத்தில் சேர்ந்து துறவியாகி ஆன்மிக குருவாகி சரித்திரத்தில் இடம்பிடித்தார். அவர் ரொபேர்ட் ஹான்சன் என்ற இயற்பெயர் கொண்ட சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி.  

அவர் இன்று தான் அமெரிக்காவில் பிறந்தார். 

இவர் "குருதேவர்" என இவரது பக்தர்களால் அழைக்கப்பட்டவர். யாழ்ப்பாணம் சிவயோக சுவாமியின் சீடர். 

ஹவாயில் கௌவாய் (kauai) தீவில் சைவ சித்தாந்த ஆதீனம் என்ற பெயரில் ஒரு கோயிலை ஆரம்பித்து "இந்து சமயம் இன்று" (Hinduism டுடே) என்ற ஆங்கில மாத இதழைத் தொடங்கி நடத்திவந்தார். 

இந்து சமயம் தொடர்பாகப் பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். 

நவம்பர் 12, 2001 அன்று ஹவாய் தீவில் இறைவனடி சேர்ந்தார்.

இவர் தொடங்கிய இந்த சிவயோக மரபில் தற்போதும் வழிபாடுகள் நடக்கின்றன.  கௌவாய்(kauai) தீவில் சைவ சித்தாந்த ஆதீனம்   செயல்பட்டுவருகிறது. 



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...