Skip to main content

நாட்டை ஆள்பவன் எப்படி இருக்க வேண்டும்?

 நாட்டை ஆள்பவன் சட்டத்தின் பலத்தை மட்டும் நம்பி இருத்தல் தவறு. 

ஒரு சாம்ராஜ்யத்தின் சக்திக்கு வெறும் சட்டங்கள் மட்டும் இருப்பது போதாது. அவற்றின் கடுமையைக் குறைத்து மனிதனுடைய மனதையும் அடக்குவதற்கு ஏதாவது ஒரு சாதனம் வேண்டும். எனவே  ராஜ்ஜியத்தையும் மத நம்பிக்கைகளையும் குழப்பாமல் தேசிய வழக்கங்களையும் மனோ தர்மங்களையும் உருப்படுத்த வேண்டும்.

 ஒரு அரசன் தன் மக்களுடைய மத விசுவாசத்தை வளர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதால் ஜனங்கள் தெய்வத்துக்கு பயந்தவர்களாக நன்னடத்தை, ஒற்றுமை முதலிய குணங்களைப் பெறுவார்கள்.

 அவர்களை சட்டங்களுக்கு கீழ்ப் படியச் செய்வது எளிதாக இருக்கும். 

அரசியல்வாதிகள் மதத்தின் உண்மைகளையும் மதிப்பையும் பற்றி யோசிக்க வேண்டியது இல்லை. சில சமயம் அரசன் தனக்கே நம்பிக்கை இல்லாத மதத்துக்கு ஆதரவளிக்க வேண்டி வரும். அவன் தன் காரியங்களில் மத நம்பிக்கைகள் குறிப்பிடாதபடி மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மக்கள்  மதத்தையும் சட்டத்தையும் அவமதிக்கத் தொடங்கி  விட்டால் ராஜ்ஜியம் அழிந்துவிடும். 

இத்தாலி அமைதி இழந்து துண்டு துண்டாகப் போய்க்கொண்டிருந்த போது தனி மனித தர்மம் வேறு அரச தர்மம் வேறு என்று போதித்தவன் மாக்யவல்லி.

இன்று வரை நாட்டை ஆள்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவன் எழுதிய பிரின்ஸ் என்ற உலகப் புகழ் பெற்ற புத்தகம் தான் தீர்வு. 

அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தான் மேற்கண்ட செய்தி. 14 ஆம் நூற்றாண்டில் எழுதியது. இன்றும் பொருந்துவது போல உள்ளது. உண்மைகள் காலம் கடந்தவை தானே.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...