கவிதையும்
நதி போலத்தான் என்று சொல்லும் கம்பன் பாடல் இது.
நதி, நிலமகள் அணிந்துள்ள ஆபரணம்.
மொழியின் ஆபரணம் கவிதை.
நதி, தான் வரும் போது வெறுமனே வராமல் நல்ல பொருள்களையும் கூடவே கொண்டுவரும்.
ஒரு நல்ல பொருளைத் தருவதே கவிதை .
ஓடி வரும் நதி, ஐம்புலன்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும். மனதுக்குள் குளுமை படரும்.
நல்ல கவிதையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறையும்.
ஓடி வரும் போது மலை, காடு, கடல், வயல், பாலை என ஐவகை நிலங்களையும் தொட்டு வருவதால் ஐந்திணை வழி நடக்கிறது நதி.
கவிதையும் குறிஞ்சி, முல்லை முதலான ஐந்திணையைப் பாடும்.
குளிர்ந்த நீரும் தெளிந்த நீரும் நதிக்கு அழகு.
இனிமையும் நீர்மையும் கவிதைக்கு அழகு.
நதி கரைக்குக் கட்டுப்படும். அது போல, கவிதை இலக்கண வரம்புக்குக் கட்டுப்படும்.
ஆகவே , கோதாவரி நதியே நீ கவிதை தான்.
புவியினுக்கு அணியாய்,ஆன்ற பொருள்தந்து,புலத்திற்றாகி
அவி அகத் துறைகள் தாங்கி,ஐந்திணை நெறி அளாவி
சவி உறத் தெளிந்து ,தண்ணென்று,ஒழுக்கமும் தழுவிச்
சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.
(கம்பராமாயணம் -ஆரணிய காண்டம்- சூர்பணகைப் படலம்)
கவிதையையும் நதியையும் ஒப்பிட்ட கம்பன் போல பெண்ணையும் நதியையும் ஒப்பிட முயல்கிறது ஒரு திரைப் பாடல்.
எது அந்தப் பாடல்?
நதியே நதியே காதல் நதியே என்னுமொரு பாடல் தான் அது.
Comments
Post a Comment
Your feedback