Skip to main content

மன்னர்களின் தகப்பன்மார்!

புதுமைப்பித்தனின் கவிதை என்ற தலைப்பிலான கட்டுரையிலிருந்து....

கவிதை கவிதை என்று சொல்லுகிறார்களே அதைப் பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு வெகு நாளாக ஆசை.  இன்றைக்குத்தான் முடிந்தது.

 "பேனா எங்கேடா? அடே ராசா நீ எடுத்தியா? குரங்குகளா  ஒன்றை மேஜைமேல் வைக்க விடாதீர்கள். அது பேனாவாகவா இருக்கிறது?  இருந்தாலும் இந்தக் குழந்தைகள் இருக்கிறதே,  மழலையாம், குழலாம், யாழாம்! அதை விட ஒரு ஓட்டைக் கிராமபோனை வைத்துக் கொண்டு காதைத் துளைத்துக் கொள்ளலாம்."

 குழந்தைகளால் என்ன பிரயோஜனம்? சுத்தத் தமிழ் பேசத் தெரியுமா? அவைகளுக்குத்தான் என்ன ஒரு கூட்டத்திலே பழகத் தெரியுமா?  இன்னும் அழாமல் இருக்கத் தெரியுமா?
 
எங்கள் வீட்டு ' ராஜா' வைப் பற்றிச் சொல்லவா?  சோற்றுக்குத் தாளம் போட்டாலும் வீட்டுக்கொரு 'ராஜா'விற்குக் குறைவில்லை.  அதில் மட்டும் பாரதி சொன்னதுக்கு ஒரு படி மேலாகவே இருக்கிறோம்.  எல்லாரும் இந்நாட்டு மன்னர்களின் தகப்பன்மார்!

 எங்கள் வீட்டு 'ராஜா' இருக்கானே அவன் பேச்செல்லாம் பாட்டு; பாட்டெல்லாம் அழுகை. அது தான் கிடக்கிறது. அவனிடத்தில் என்ன அதிசயம் இருக்கிறது?  அவனுக்கு இருக்கும் அசட்டுத்தனத்துகக்கு என்ன சொல்லுகிறது? என்னுடைய கைத்தடியை எடுத்துக் கொண்டான், அதுதான் அவனுக்குக் குதிரையாம்! குதிரைக்கும் தடிக்கம்புக்கும் வித்தியாசம் தெரியாத அசட்டைப்  பார்த்து யாரால் உற்சாகப்பட முடியும். அதற்கும் ஒரு பிரகிருதி இருக்கிறது, அதுதான் அவன் தாயார். 

 அது தான் கிடக்கிறது,  தமிழை தமிழாகப் பேசத் தெரிகிறதா? இலக்கணம் தெரியுமா?  தொல்காப்பியம் படித்திருக்கிறதா?  இந்தக் குழந்தைகளினால் என்ன பிரயோஜனம்?  உங்களுக்குத் தெரியுமா அவர்களினால் என்ன பிரயோஜனம்? 

ஓஹோ?  கவிதையா?  இன்னொரு தடவை பார்த்துக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...