Skip to main content

Posts

Showing posts from January, 2026

ஜனவரி 8

ஜனவரி 8, 1642 இத்தாலியின் புகழ்பெற்ற வானியல் அறிஞர் கலிலியோ கலிலி இன்று காலமானார். கீழே விழுகின்ற பொருட்கள் பற்றிய இயற்பியல் விதிகளை வகுத்தவர் இவர்தான். தொலைநோக்கியை வானியல் ஆய்வுக்கு முதன் முதலில் பயன்படுத்தியவரும் இவர்தான். ஜனவரி 8,  1901 20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களுள்  ஒருவரான பன்மொழிப்புலவர் என்று அழைக்கப்பட்ட தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிறந்த நாள்.  ஜனவரி 8,1938 நம் நாட்டில் தயாரித்த முதல் வண்ணப் படம் வெளியான நாள் இன்று. இம்பீரியல் கம்பெனி தயாரித்த கிஸான்கன்யா என்ற முதல் வண்ணப் படம் இன்று வெளியானது. ஜனவரி 8, 1941 ஸ்கௌட் அதாவது சாரணர் இயக்கத்தை உருவாக்கிய லார்ட் பேட்டர்ன் பவுல் இன்று காலமானார். ஜனவரி 8, 1994 காஞ்சி மகாசுவாமி, காஞ்சி மகா பெரியவாள் என்று அழைக்கப்படும்  காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் இன்று இறைவனடி சேர்ந்தார். இவர் வழங்கிய தெய்வத்தின் குரல் என்னும் நூல் இந்து மதத் தத்துவங்களைப் பற்றிய விரிவான செய்திகளைக் கொண்டது. 

ஜனவரி 7

 ஜனவரி 7, 1893 மின்காந்த மின் பாய்வு, வெப்பக் காந்த விளைவுகள், ஒளியியல் குறுக்கீடுகள், வெப்பக் கடத்தல் ஆகியவற்றில் ஆய்வுகள் செய்த இயற்பியல் விஞ்ஞானி ஜோசப் ஸ்டெஃபன் இன்று காலமானார். இவர் கண்டுபிடித்த விதி ஸ்டெஃபன் போல்ட்ஸ்மான் விதி என்று குறிப்பிடப்படுகிறது. ஜனவரி 7,1978 அண்டார்டிகாவில்  முதன்முதலாக இன்று  ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர்  எமிலியோ மார்கோஸ் பால்மா.  உண்மையில் அண்டார்டிகாவில் குழந்தை பெற்றுக்கொண்டு சாதனை படைக்க வேண்டும் என்றெல்லாம் அந்தக் குழந்தையின் தாய் நினைக்கவில்லை. அவரது அண்டார்டிகா பயணத்தின் போது, குறித்த காலத்துக்கு முன்பே குழந்தை பிறந்தது. இப்படியாக வந்தது தான் இந்த உலக சாதனை.  இன்றுவரை அண்டார்டிகாவில் 11 குழந்தைகள் பிறந்திருக்கின்றன. எ ந்தக் குழந்தைக்கும் எதுவும் ஆகவில்லை. எல்லாக் குழந்தைகளும் நலமுடன் இருக்கின்றன. கடுங்குளிர், மருத்துவ வசதி  எதுவும் இல்லாமை என்று ஆபத்தான சூழல் நிலவிய போதும் குழந்தைகள்  நலமுடன் பிறந்து நன்றாக இருக்கின்றன. 

மகிழ்ச்சியாக என்னை நினைக்கலாம். மகிழ்ச்சியாக என்னை மறக்கலாம்.

      பிறப்பு என்பதை மகிழ்ச்சி என்றும் மறைவு என்பதே வலி மிகுந்த இழப்பு என்றும் நம் புரிந்து கொண்டிருக்கிறோம். அதெல்லாம் நீங்கள் நினைத்துக் கொள்வதுதான் அது உண்மை அல்ல என போகிற போக்கில் சொல்கிறது இந்தப் பாட்டு .  Christina Rossetti என்ற ஒரு பெண் கவிஞரால் எழுதப்பட்டது இது .  மறைந்து விட்ட ஒருவர் தனக்கு ரொம்பப் பிரியமானவருக்குச் சொல்வது போல அமைந்தது இந்தப் பாடல் .  அந்தப் பாட்டு சொல்வது இது தான் . நான் மறைந்த பிறகு என்னை நினைத்து சோகப் பாடல்களோடு புலம்பிக் கொண்டிருக்க வேண்டாம் . என் நினைவிடத்தில் ரோஜாச் செடிகளையோ நிழல் மரங்களையோ நட வேண்டாம் . சிறு துளிக்கு , இடம் தரும் புல்லாக நீயே என்னைப் போர்த்திக் கொண்டிருக்கவேண்டும் .   ( புல் மழையில் நனையும் ; சேற்றில் சிக்கும் ; வெயிலில் காயும் ; கருகும் . ஆனால் எப்போதும் இருந்து கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கும் . அதனால் தான் சொல்கிறேன் . என் நினைவு என்னும் தரையில் நீ எதற்கும் சோர்ந்து போகாத புல்லாக இரு .)   நீ விரும்பி...

ஜனவரி 6

ஜனவரி 6, 1847:  இசை மேதை தியாகராஜ சுவாமிகள் மறைந்த தினம்.  ஜனவரி 6 1852  கண் பார்வையற்றவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்து கொள்வதற்காக ரபிகிராபி (Raphigraphy) என்னும் புள்ளி வடிவமை எழுத்து முறையை உருவாக்கிய லூயிஸ் பிரெய்லி இன்று மரணமடைந்தார். லூயிஸ் பிரெய்லி பிரெஞ்சு நாட்டில் பிறந்த ஒரு பார்வையற்றவர். தான் பார்வையற்ற நிலையில் இவர் உருவாக்கிய  பிரெய்லி எழுத்து முறை இன்று உலகில் உள்ள பார்வை இல்லாதவர்களையும்  படிப்பாளிகளாக்கி வருகிறது.   ஜனவரி 6 1883 இலக்கிய உலகில் என்றும் நினைவு கூரப்படும்   கலீல் ஜிப்ரான் இன்று தான் பிறந்தார். லெபனானில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து உலகமெங்கும் புகழ்பெற்ற  கவிஞரானவர்  ஜிப்ரான் .   ஜனவரி 6 1884  மரபியலின் தந்தை என்று போற்றப்படுகின்ற கிரிகோரி ஜான் மெண்டல் இன்று காலமானார்.  ஜனவரி 6 1997   கவிஞர் பிரமிள் மறைந்த நாள்.  பிரமிள் என்பது புனைபெயர்.  தருமு சிவராம் என்பது தான் இவர் பெயர். அதுவும் கூட அவரது உண்மையான பெயர் ஆகாது. சிவராமலிங்கம் என்ற இயற்பெயரை  தருமு சிவராம் என...

ஜனவரி 5

  ஜனவரி 5, 1900  சுதேசமித்திரன் நாளிதழாக வெளிவர ஆரம்பித்தது. இப் பத்திரிக்கை முதன்முதலாக ஜி.சுப்பிரமணிய ஐயரால் 1882 ஆம் ஆண்டு வார இதழாகத் துவக்கப்பட்டது.  ஜனவரி 5,1909  எவர்செட் விளைவு இன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டது. ஜான் எவர் செட் என்பவர் தமிழ்நாட்டில் கொடைக்கானல் வான் ஆய்வுக்கூடத்திலிருந்து சூரியனை ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது சூரியப்புள்ளிகளைச் சுற்றி மிகப் பிரமாண்டமான வளியச் சுழல்கள் சுழன்று இயங்குவதைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு அங்கு சலவை க்  கல்லில் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. அவர் கண்டுபிடித்த இந்தக் கண்டுபிடிப்பு தான் அவர் பெயரில் எவர்செட் விளைவு என்று குறிப்பிடப்படுகிறது.   ஜனவரி 5,1927  கலிபோர்னியாவில் பிறந்த ஒரு அமெரிக்கர் இந்து மாதத்தில் சேர்ந்து துறவியாகி ஆன்மிக குருவாகி சரித்திரத்தில் இடம்பிடித்தார். அவர் ரொபேர்ட் ஹான்சன் என்ற இயற்பெயர் கொண்ட சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி.   அவர் இன்று தான் அமெரிக்காவில் பிறந்தார்.  இவர் "குருதேவ ர் " என இவரது பக்தர்களால் அழைக்கப்பட்டவர். யாழ்ப்பாணம் சிவயோக சுவாமியின் சீடர்...

நாட்டை ஆள்பவன் எப்படி இருக்க வேண்டும்?

 நாட்டை ஆள்பவன் சட்டத்தின் பலத்தை மட்டும் நம்பி இருத்தல் தவறு.  ஒரு சாம்ராஜ்யத்தின் சக்திக்கு வெறும் சட்டங்கள் மட்டும் இருப்பது போதாது. அவற்றின் கடுமையைக் குறைத்து மனிதனுடைய மனதையும் அடக்குவதற்கு ஏதாவது ஒரு சாதனம் வேண்டும். எனவே  ராஜ்ஜியத்தையும் மத நம்பிக்கைகளையும் குழப்பாமல் தேசிய வழக்கங்களையும் மனோ தர்மங்களையும் உருப்படுத்த வேண்டும்.  ஒரு அரசன் தன் மக்களுடைய மத விசுவாசத்தை வளர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதால் ஜனங்கள் தெய்வத்துக்கு பயந்தவர்களாக நன்னடத்தை, ஒற்றுமை முதலிய குணங்களைப் பெறுவார்கள்.  அவர்களை சட்டங்களுக்கு கீழ்ப் படியச் செய்வது எளிதாக இருக்கும்.  அரசியல்வாதிகள் மதத்தின் உண்மைகளையும் மதிப்பையும் பற்றி யோசிக்க வேண்டியது இல்லை. சில சமயம் அரசன் தனக்கே நம்பிக்கை இல்லாத மதத்துக்கு ஆதரவளிக்க வேண்டி வரும். அவன் தன் காரியங்களில் மத நம்பிக்கைகள் குறிப்பிடாதபடி மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். மக்கள்  மதத்தையும் சட்டத்தையும் அவமதிக்கத் தொடங்கி  விட்டால் ராஜ்ஜியம் அழிந்துவிடும்.  இத்தாலி அமைதி இழந்து துண்டு துண்டாகப் போய்க்கொண்டிருந்த போது த...