Skip to main content

Posts

Showing posts from April, 2024

மே 1

   மே 1, 1895  பால்டி மோரில் முதல் மின்சார ரயில் பயணிகளுக்காக விடப்பட்டது.   மே 1,1897  கல்கத்தாவில் சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார். மே 1, 1917  சிறந்த முறையில் பொதுசேவை புரியும் பத்திரிகைகள், பத்திரிகைகளின் பல்வேறு துறைகளில் சிறந்த தொண்டாற்றியவர்கள், நாவல், நாடகம், அமெரிக்க வரலாறு, வாழ்க்கை வரலாறு, கவிதை, இசை முதலான ஆறு துறைகளிலும் சிறந்த படைப்பு ஆகியவற்றிற்காக ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கும் திட்டம் கொலம்பியா பல்கலைக்கழகத்தினால் இன்று தொடங்கப்பட்டது. மே 1,1960  பம்பாய் மாநிலம்  மொழி வழியாக பிரிக்கப்பட்டு   மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் இன்று உருவாக்கப்பட்டன.  மே 1,1965   திருச்சியில் கனரக கொதிகலன் சாலை துணை ஜனாதிபதி ஜாகிர் உசேனால் இன்று திறந்து வைக்கப்பட்டது  மே 1,1993   மே தினத்தை ஒட்டி இலங்கை ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு நகரில் ஒரு ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது அந்த ஊர்வலத்துக்கு இலங்கை அதிபர் பிரேமதாசா தலைமை தாங்கி ஒரு ஜிபில் சென்றார் அப்போது நகரின் மையப்பகுத...

What is Kallakkadal?

   What is Kallakkadal ? (கள்ளக் கடல்)      Why in News? Recently, hundreds of houses have been flooded in several coastal areas of Kerala due to high sea waves named Kallakkadal. Lakshadweep and Tamil Nadu coast are other areas often affected by Kallakkadal. Kallakkadal refers to coastal flooding caused by swell waves (different from ordinary waves) during the pre-monsoon season (April-May) and sometimes during post monsoon along the southwest coast of India. The term Kallakkadal, used by local fishermen, is a combination of two Malayalam words, including Kallan and Kadal . “Kallan means thief and Kadal means sea, meaning “ocean that arrives as a thief". It is caused by waves formed by ocean swells, which originate from distant storms such as hurricanes or prolonged periods of intense gale winds (usually in the southern part of the Indian Ocean). These storms transfer significant energy from the air into the water, resulting in the formation of extremely high ...

ஏப்ரல் 29

  ஏப்ரல் 29, 1891 கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் இன்று. ஏப்ரல் 29, 1913  பிரான்ஸ் தொழிலதிபரும் டீசல் இன்ஜினியரிங் கண்டுபிடித்தவருமான ரூடால்ப் டீசல் கப்பலில் சென்று கொண்டிருக்கும்போது இன்று காணாமல் போனார். ஏப்ரல் 29, 1945  ஹிட்லர் பல ஆண்டுகளாக தனது காதலியாக இருந்த இபா பிரவுனை திருமணம் செய்து கொண்டார். தனது  அரசியல் வாரிசாக அட்மிரல் டோனட்சை நியமித்தார்.  ஏப்ரல் 29, 1979  தினமலர் நாளிதழ் தமிழக தலைநகர் சென்னையில் துவக்கப்பட்டது. தாமிரபரணிக் கரையில் பிறந்து தலைநகர் வந்த முதல் பத்திரிக்கை இது. 

ஏப்ரல் 28

  ஏப்ரல் 28 1799  ஸ்ரீரங்கப்பட்டணம் ஆங்கிலேயர்களால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. திப்புசுல்தான் கொல்லப்பட்டான். ஆங்கிலப் படைகள் தடுப்பார் யாருமின்றி தொடர்ந்து பல நாட்கள் ஸ்ரீரங்கப்பட்டணத்தை சூறையாடினர். ஏப்ரல் 28 1848 பரமசிவன், பார்வதி, இலக்குமி சரஸ்வதி என தெய்வங்களின் திருவுருவப் படங்களை ஓவியமாக வரைந்த  ராஜா ரவி வர்மா திருவாங்கூரில் கிளிமானூர் என்று சிற்றூரில் இன்று தான் பிறந்தார். இவர் வரைந்த ஓவியங்கள் தான் இன்று பூஜை அறைகளிலும் பக்திக்குரிய இடங்களிலும் இடம்பெற்றுள்ளவை. ஏப்ரல் 28, 1942 தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் திருக்கழுக்குன்றத்தில் காலமானார். தமிழுக்காகவே மறு பிறவி எடுக்க விரும்பியவர்.  ஏடு தேடிய ஏந்தல்.  87 ஆண்டுகள் வாழ்ந்த இவர் 87 நூல்களை வழங்கியுள்ளார்.

10 Social Science March 2024

 10 Social Science March 2024

இவர்களுக்கு மட்டும் எப்படி?

  வெட்டியாகத் திரிபவன் தங்கச் சங்கிலி போட்டிருந்தாலும் அது கவரிங் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.   காசு பணம் இருப்பவன் கவரிங் நகை அணிந்தாலும் அதை தங்கம் என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள். பனை மரத்தடியில் நின்று பால் குடித்தாலும் அது கள் தான் என்று முடிவு செய்துவிடுவார்கள். உலகம் இப்படி லாஜிக் பார்த்து முடிவு செய்கிறது. ஆனால் மாண்பமை மனிதர்களுக்கு,  புல்லர்கள் (கிரிமினல்கள்) சொல்லும் பொய்மொழி  மட்டும் எப்படியோ உண்மை என்றே தோன்றுகிறது. யாரைச் சொல்கிறது இந்தப் பாடல். நீதிபதிகளையா?  அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் சொல்லும்   வாக்குறுதிகளால் ஆசைகாட்டி ஏமாற்றப்படும்  அப்பாவி மக்களையா? வீணர்பூண் டாலுந் தங்கம் வெறும்பொய்யாம் மேற்பூச் சென்பார் பூணுவார் தராப்பூண் டாலும் பொருந்திய தங்க மென்பார் காணவே பனைக்கீ ழாய்ப்பாற் குடிப்பினும் கள்ளே யென்பார் மாணுல கத்தோர் புல்லர் வழங்குரை மெய்யென் பாரே.  (விவேக சிந்தாமணி)

ஔரங்கசீப் தனது ஆசிரியருக்கு எழுதிய கடிதம்.

  முகலாய பேரரசர்களில் ஒருவரான 'ஔரங்கசீப்' தனது ஆசிரியருக்கு எழுதிய கடிதம்.   ஆசிரியரே! நீர் என்னிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? நான் உங்களை என்னுடைய அரசவையில் ஒரு முக்கிய பதவியில் அமர்த்தவேண்டுமென்று உங்களால் நியாயமாக எதிர்பார்க்க முடியுமா?  ஒன்று சொல்கிறேன், நீங்கள் எனக்கு எப்படிக் கல்வி போதித்திருக்க வேண்டுமோ, அப்படிச் செய்திருந்தால் உங்களுக்கு நான் பதவியைத் தருவது போன்ற நியாயமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது. ஏனென்றால் நான் ஒரு விஷயத்தை நிச்சயமாக ஒப்புக்கொள்வேன்.  ஒரு குழந்தை தன்னுடைய தந்தைக்கு எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறதோ, அந்த அளவுக்குத் தனக்கு முறையான கல்வியைப் போதித்த ஆசிரியனுக்கும் கடமைப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் எனக்குப் போதித்த முறையான கல்வி என்பது எங்கே இருக்கிறது? ஐரோப்பாவை ஒன்றுமில்லாத ஒரு சூன்யப் பிரதேசம் என்று போதித்தீர்கள், போர்ச்சுகீஸிய நாட்டு மாபெரும் மன்னரைப் பற்றியோ, அவருக்கு அடுத்த ஹாலந்து மன்னரைப் பற்றியோ, இங்கிலாந்து மன்னரைப் பற்றியோ, நீர் எமக்கு ஒரு விபரமும் கூறவில்லை, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாட்டு மன்னர்களை எல்லா...

ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

  அமெரிக்க முன்னால் அதிபர் ஆபிரகாம் லிங்கன் தனது மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் ஒவ்வொரு ஆசிரியராலும் படிக்கப்பட வேண்டிய ஒன்று.  அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்கு சொல்லித்தாருங்கள். ஆனால் பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்குத் தெரிவியுங்கள் .   பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.   எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது , கோழைத்தனம் என புரியவையுங்கள்.   புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடிலா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.   வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும்,சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும் ,பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்கக் கற்றுத்தாருங்கள்.     ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.   மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சு...

10 Science March 2024

 

10 Maths March 2024

 

10 English March 2024

 

10 Tamil March 2024