Skip to main content

Posts

Showing posts from June, 2024

அது என்ன பகீரதப் பிரயத்தனம்?

அது ஒரு கதை. கதிரவ குலத்தில் தோன்றிய பகீரதனின் முன்னோர்கள் 60,000 பேர் கபில முனிவருடைய சாபத்தினால் சாம்பலாகி நற்கதியை அடையாமல் கிடந்தனர். அவர்களுக்கு நற்கதி தர விரும்பிய பகீரதன்,  பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் க டு ந்தவம் இயற்றி, ஆகாய கங்கையை விண்ணுலகிலிருந்து மண்ணுலகுக்குக் கொண்டுவந்து தன் முன்னோர்களை நற்கதி அடையச் செய்தான் என்பது புராணம்.  அது முதல் கடும் உழைப்பையும், விடாமுயற்சியையும்  கொண்டு ஒரு செயலைச் செய்ய முயலும் யாரையும் பகீரதனோடு ஒப்பிட்டு அவர்களின் முயற்சியை  பகீரதப் பிரயத்தனம் என்று சொல்வது மரபாகிவிட்டது. ஒவ்வொரு மரபுத் தொடருக்கும் பின்பு ஏதோ  ஒரு கதை இருக்கும். அவற்றுள் சில புராணக்கதைகளும் இருக்கும். இது அதில் ஒன்று. நீலிக் கண்ணீர் சொல்லும் நீலியும் ஒரு  புராணக் கதை தான். திரிசங்கு சொர்க்கம் என்ற மரபுத்தொடர் சொல்லும் திரிசங்கு ஒரு  புராணக் கதை தான். புராணப் பெயர்கள் வராத போதும் புராணங்கள் தமிழுக்கு நிறையத் தொடர்களைத் தந்துள்ளன. மூக்கறுப்பு (நோஸ் கட் ) என்பது இராமாயணத்தில் இராவணன், சூர்ப்பனகை ஆகியோர் தொடர்புடைய ஒரு தொடர் தான். புராணக் கதை த...

புல்வெளி புல்வெளி தன்னில்...

  இது ஒரு கர்ணன் பரம்பரைக்   கதை .   சோழ மன்னன் ஒரு நாள் விடியற் காலையில் நகர்வலம் போகிறான் . அப்போது ஏற்றம் இறைக்கும் போது பாடும் ஒரு பாடல் அவன் காதில் விழுகிறது .   மோட்டு வெளி கொத்தி   முல்லைச்செடி வைத்தோம் முல்லைச் செடி பார்க்க முத்தழகி வந்தாள் முத்தழகி தோளில் மூங்கில் வரக் கண்டோம் மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே ..   மன்னன் தாண்டிப் போய்விடுகின்றான் . ஆனால் , அவன் மனமோ பாதி கேட்ட இந்தப் பாட்டையே நினைத்துக் கொண்டிருக்கிறது . மீதி அடிகள் என்னவாக இருக்கும் என்று மன்னன்,   கம்பன் மகன் அம்பிகாபதியிடம் கேட்க அம்பிகாபதி பாடியதாகச் சொல்லப்படும்  வரிகள் இவை.   மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே வாங்கும் கதிர் வாழ்க வண்டமிழ் வாழ்க வண்டமிழைக் கொண்டு வையமெல்லாம் வாழ்க .   இது அந்தாதியில் அமைந்த ஒரு நாட்டுப் புறப் பாடல் . இதே பாட்டுக்கு கம்பன் பெயரிலும் ஒரு கதை இருக்கிறது . இந்தப் பாட்டின் ...

ஜூலை 11

  ஜூலை 11,1920 நாவலர் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் தமிழ் எழுத்தாளருமான நெடுஞ்செழியன் பிறந்த நாள்.  ஜூலை 11,1925 குன்றக்குடி அடிகளார்  பிறந்த நாள். ஜூலை 11,1946 'பாஷா கவி சேகரர்' மகாவித்துவான் இரா.இராகவையங்கார் மறைந்த தினம்.  பதிப்பு சொற்பொழிவு ஆராய்ச்சி செய்யுள் மொழியியல் மொழிபெயர்ப்பு முதலான 15 துறைகளில் முன்னோடியாக விளங்கியவர் இவர். 

தலையில் வெள்ளைமுடி எதுவும் இல்லையே, எப்படி?

உங்களுக்கு தலையில் வெள்ளைமுடி  எதுவும் இல்லையே, எப்படி இது? இந்தக் கேள்விக்கு அந்தப் பெரியவர் சொன்ன ரகசியம் இது தான். என்னுடைய மனைவி தங்கமான குணம் உடைய பெண். என்னுடைய குழந்தைகளும் கூட அப்படித்தான்.   எங்கள் வீட்டு வேலைக்காரப் பெண்ணோ நான் ஏதும் சொல்லவேண்டியதே இல்லை. அவ்வளவு நல்ல பெண்.  என்னுடைய அரசனோ நல்லவன். அவன் முறையில்லாத, மக்களுக்கு கெடுதல் என்று தெரியும் எதையும் செய்யமாட்டான்.  தீயவை மக்களை அண்டாமல் பாதுகாக்கிறான். எங்கள் ஊரில் நிறையப் பேர் நல்லவர்கள் தான்.   மது அருந்துதல் போன்ற  தீய பழக்கங்கள் அணுகாமல் ஐம்புலன்களையும் அடக்கி ஆளுகிறார்கள். பெரியவர்களை மதித்துப் போற்றுகிறார்கள். அதனால் எனக்குக் கவலைகள் ஏதும் இல்லை. நரை முடி    இல்லாதவனாக இருக்கிறேன்! வெள்ளைமுடி இல்லாமல் பராமரிக்கும்  ரகசியத்தை இப்படி விலாவாரியாகச் சொன்னார் அந்தப் பெரியவர்.  நாமும் தான் வெள்ளைமுடி இல்லாமல் பராமரிக்கிறோம். அதற்காக  ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலவு  செய்கிறோம் என்பதை இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பதில்லை, அவ்வளவு தான். யாண்டு ...

நதியே நீ ஒரு கவிதை!

  கவிதையும் நதி போலத்தான் என்று சொல்லும் கம்பன் பாடல் இது. நதி ,   நிலமகள் அணிந்துள்ள ஆபரணம் .  மொழியின் ஆபரணம் கவிதை .  நதி , தான் வரும் போது வெறுமனே வராமல்   நல்ல பொருள்களையும் கூடவே கொண்டுவரும் .  ஒரு   நல்ல பொருளைத் தருவதே கவிதை .   ஓடி வரும் நதி , ஐம்புலன்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் . மனதுக்குள் குளுமை படரும் .  நல்ல கவிதையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறையும் . ஓடி வரும் போது  மலை, காடு,  கடல், வயல், பாலை என ஐவகை நிலங்களையும் தொட்டு வருவதால் ஐந்திணை வழி நடக்கிறது நதி .  கவிதையும்  குறிஞ்சி, முல்லை முதலான  ஐந்திணையைப் பாடும் . குளிர்ந்த நீரும் தெளிந்த நீரும் நதிக்கு அழகு .  இனிமையும் நீர்மையும் கவிதைக்கு அழகு . நதி   கரைக்குக்  கட்டுப்படும்.    அது போல,    கவிதை இலக்கண வரம்புக்குக்   கட்டுப்படும் .  ஆகவே , கோதாவரி நதியே நீ கவிதை தான் .   புவியினுக்கு அணியாய் , ஆன்ற பொருள்தந்து , புலத்திற்றாகி ...

ஜூன் 13

  ஜூன் 13,  1988 தமிழறிஞர் க. வெள்ளை வாரணனார் மறைந்த தினம்.  ஜூன் 13, 1992  இந்திய திரைப்பட உலகின் சிறந்த நடன இயக்குனர் சத்யநாராயணன் பம்பாயில் காலமானார்.