ஓர் இடத்தில் விளக்கு வைக்கப்பட்டுள்ளது
என்றால், விளக்கு வைக்கப்பட்ட இடம் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள இடங்களுக்கும்
அந்த விளக்கு ஒளி தரும். அதுபோல, ஒரு பாடலின் குறிப்பிட்ட ஒரு சொல் அல்லது ஒரு அடி
பிற இடங்களுக்கும் சென்று பொருள் தரும் என்றால் அது தீவக அணியாகும்.
தீவகம் என்ற சொல்லுக்கு விளக்கு (தீபம்) என்று பொருள்.
பழனி என்ற
திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் இது.
ஆறோடும்
மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும்
என்றும் நம்ம தேரோடும்
போராடும்
வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும்
சேர்ந்துண்ணலாம்
மண்ணிலே
தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு
கண்ணிலே
காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே
ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு
பஞ்சமும்
நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு
சேராத
செல்வம் இன்று சேராதோ?
தேனாறு
நாட்டில் எங்கும் பாயாதோ?
பச்சை வண்ணச்
சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
பருவம் வந்த
பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா
அண்ணன் தம்பி
நால்வருண்டு என்ன வேணும் கேளம்மா
அறுவடைக்
காலம் உந்தன் திருமண நாளம்மா
கைகட்டிச்
சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய்
சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட
மன்னன் ஏது?
பேர்
சொல்லும் புலவன் ஏது?
ஏர் கொண்ட
உழவன் இன்றிப்
போர்
செய்யும் வீரன் ஏது?
இந்தப்
பாடலின் கடைசி அடிகளைக் கவனித்துப் பாருங்கள். தீவக அணி இருப்பதைக் கண்டுபிடித்து
விடலாம்.
'ஏர் கொண்ட
உழவன் இன்றி' என்பது விளக்கு போன்றது. இது மற்ற அடிகளுக்கெல்லாம் வெளிச்சம் தருவதை
உணரமுடியும்.
அதாவது,
ஏர் கொண்ட
உழவன் இன்றி
தேர் கொண்ட
மன்னன் ஏது?
ஏர் கொண்ட
உழவன் இன்றி
பேர்
சொல்லும் புலவன் ஏது?
ஏர் கொண்ட
உழவன் இன்றி
போர்
செய்யும் வீரன் ஏது?
என ஒவ்வொரு
அடியும் ஏர் கொண்ட உழவனால் ஒளிர்வதைக் காணலாம்.
இதில் உயிர்
கொடுக்கும் அந்த அடி இடையில் இருப்பதால் இது இடைநிலைத் தீவகம் எனக் கூறுவர்.
முதல் அடி
சிலநேரங்களில் விளக்கு போல இருக்கும். அதை முதல்நிலைத் தீவகம் என்று
கூறுவர்.
கடைசிஅடி
விளக்கு போல இருந்தால் அதை கடைநிலைத் தீவகம் என்று சொல்லுவார்கள்.
"குணந்தொழில் சாதிபொருள் குறித்தொரு சொல்
ஒரு வயினின்றும் பலவயிற் பொருடாற்
தீவகஞ் செய்யுண் மூவிடத்தியலும்" – (தண்டியலங்காரம்)
Comments
Post a Comment
Your feedback