விசுவாமித்திரர் இராமனிடம் கூறுகிறார்:
அகலிகையின் வரலாறு முற்காலத்தில் இவ்வாறு நிகழ்ந்தது.
நீ அவதரித்த பின்பு, இனி இந்த உலகு துன்பத்தின் வழியை அடைதல் கூடுமோ?
மேகம் போன்ற கரிய திருமேனியுடைய இராமனே!
அங்கு வனத்தில் மை போன்று கரிய நிறம் கொண்ட தாடகை என்னும்
அரக்கியோடு செய்த போரில், உன் கைவண்ணம் (வில்லினது ஆற்றல்)
பார்த்தேன். இங்கு, கால்வண்ணம் (அகலிகைக்கு
சாபவிமோசனம்) பார்க்கிறேன்.
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்றோர் துயர் வண்ணம் உறுவது
உண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில், மழைவண்ணத்து
அண்ணலே! உன்
கைவண்ணம் அங்கு கண்டேன்; கால்வண்ணம் இங்கு
கண்டேன்.
உய்வண்ணம் – உய்யும் வழி
மழை – மேகம்
அண்ணல் – இராமன்
பால்வண்ணம் பருவங்கண்டு
வேல்வண்ணம் விழிகள் கண்டு
மால்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
கண்வண்ணம் அங்கே கண்டேன்
கைவண்ணம் இங்கே கண்டேன்
பெண்வண்ணம் நோய்கொண்டு வாடுகிறேன்
(கண்ணதாசன்)
Comments
Post a Comment
Your feedback