விசுவாமித்திர ர் இராம னி ட ம் கூ று கி றா ர்: அகலிகையின் வரலாறு முற்காலத்தில் இவ்வாறு நிகழ்ந்தது. நீ அவதரித்த பின்பு , இனி இந்த உலகு துன்பத்தின் வழியை அடைதல் கூடுமோ ? மேகம் போன்ற கரிய திருமேனியுடைய இராமனே! அங்கு வனத்தில் மை போன்று கரிய நிறம் கொண்ட தாடகை என்னும் அரக்கியோடு செய்த போரில் , உன் கைவண்ணம் (வில்லினது ஆற்றல்) பார்த்தேன். இங்கு , கால்வண்ணம் ( அகலிகைக்கு சாபவிமோசனம்) பார்க்கிறேன் . இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் ; இனி இந்த உலகுக்கு எல்லாம் உய்வண்ணம் அன்றி , மற்றோர் துயர் வண்ணம் உறுவது உண்டோ ? மைவண்ணத்து அரக்கி போரில் , மழைவண்ணத்து அண்ணலே! உன் கைவண்ணம் அங்கு கண்டேன் ; கால்வண்ணம் இங்கு கண்டேன். உய்வண்ணம் – உய்யும் வழி மழை – மேகம் அண்ணல் – இராமன் பால்வண்ணம் பருவங்கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மால்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன் கண்வண்ணம் அங்கே கண்டேன் கைவண்ணம் இங்கே கண்டேன் பெண்வண்ணம் நோய்கொண்டு வாடுகிறேன் (கண்ணதாசன்)