Skip to main content

Posts

Showing posts from September, 2023

ஆறோடும் மண்ணில்...தீவகம்

  ஓர் இடத்தில் விளக்கு வைக்கப்பட்டுள்ளது என்றால், விளக்கு வைக்கப்பட்ட இடம் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள இடங்களுக்கும் அந்த விளக்கு ஒளி தரும். அதுபோல, ஒரு பாடலின்  குறிப்பிட்ட ஒரு சொல் அல்லது ஒரு அடி பிற இடங்களுக்கும் சென்று பொருள் தரும் என்றால் அது தீவக அணியாகும்.  தீவகம் என்ற சொல்லுக்கு விளக்கு (தீபம்) என்று பொருள்.  பழனி என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் இது. ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை ஊரோடும் சேர்ந்துண்ணலாம்   மண்ணிலே தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு   நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு சேராத செல்வம் இன்று சேராதோ? தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ?     பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா   அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேணும் கேளம்மா அறுவடைக் காலம் உ ந் தன் திருமண நாளம்மா   கைக...

கரும்பா? பனையா?

  நிலத்தின் இயல்புக்கு ஏற்ற தாவரங்களே மண்ணுக்கு நன்மை பயப்பன.  அந்த மண்ணுக்கேற்ற தாவரங்கள் இயல் தாவரங்கள் எனக் கூறப்படும். தொல்காப்பியம் சொல்லும்  இயல் தாவரங்களுள் பனையும் (போந்தை) ஒன்று.  பனந்தோட்டுடன் பூக்களை வைத்துச் சூடுதல் பண்டையமரபு. பதிற்றுப்பத்தும் புறநானூறும் சிலப்பதிகாரமும்  இம்மரபைக் கூறுகின்றன.  பனை புல்லினத்தைச் சேர்ந்தது என தொல்காப்பியம் சுட்டும். மித வெப்பமண்டலப் பகுதிகளில் மிகக் குறைந்த அளவே நீர்த் தேவையைக் கொண்ட  பனை வறண்ட நிலங்களிலும் மனித முயற்சியின்றி இயல்பாக வளரும் தன்மையுடையது. தொல்காப்பியம், குறுந்தொகை தொடங்கி இலக்கியங்களில் பதிவு பெற்றுள்ளதன் மூலம் பனையின் பயன்பாடு அதிகமாக இருந்ததையும், பனைமரங்களின் சூழலியல் முக்கியத்துவத்தைப் பழந்தமிழர் அறிந்திருந்ததையும் நாம் உணரலாம்.   பனையானது மிக நீளமானதும் உறுதியானதுமான சல்லி வேர்த் தொகுப்பைப் பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்க பண்டைத் தமிழரால் பயன்படுத்தப்பட்டது.  கூட்டமான மரங்களைக் கொண்ட காடுகள் அழிக்கப்படும் போதும், அடர் மரங்கள் இல்லாத நிலங்களிலும் உயிரின...