Skip to main content

Posts

Showing posts from May, 2024

மே 19

  மே 19, 1498 நான்கு கப்பல்களுடனும் 170 மாலுமிகளுடனும் லிஸ்பனை விட்டு புறப்பட்ட போர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோடகாமா இன்று கள்ளிக்கோட்டையில் கரையிறங்கினார்.

என்ன நன்றி செய்துவிட முடியும்?

  கோவிலுக்குச் செல்லும் போது ஆண்டவனுக்குப் படைப்பதற்காக தேங்காய் பழம் எல்லாம் எடுத்துச் செல்கிறோம். அவை எல்லாம் நம்முடைய பக்தியைக் காட்டுவதற்காகத் தானே தவிர ஆண்டவனுக்கு நாம் செய்யும் உபகாரம் அல்ல.    அப்படியிருக்க இது நடந்தால் இது செய்வேன் என்று நிபந்தனை விதித்து கடவுளுக்குக் காணிக்கை கொடுப்பது சரியா? என யோசிக்க வைக்கிறது இந்தப் பாடல்.   உலகத்தில் இருக்கக்கூடிய உயிர்களெல்லாம் வளர உதவியாக இருப்பது மழை.  தானம் தவம் எல்லாம் நின்று நிலைத்திடச் செய்வது மழை.  அந்த வானம் உனக்கு செய்த நன்றிக்கு உன்னால் என்ன திருப்பி ச்    செய்துவிட முடியும்? உன்னால் மட்டுமல்ல, உலகத்தில் இருக்கும் யாரும் மழைக்கு பிரதி உபகாரம் செய்ய முடியாதே. அப்படியிருக்க, உனக்குக் கருணை காட்டி, கோடிகோடியான துன்பங்களை அகற்றி நன்மை செய்து வருகின்ற சிவபெருமானுக்கு, நீ தரும் காணிக்கை நன்றியாகி விடுமா?      கூன்செய்த பிறையணியும் தண்டலையார் கருணைசெய்து கோடி கோடி யான்செய்த வினையகற்றி நன்மைசெய்தார் உபகாரம் என்னால் உண்டோ ஊன்செய்த உயிர்வளரத் தவம்தானம் வளர்ந்தேற உத...

கண்ட குரங்குகள் எல்லாம்...

  அவளைப் பெண் கேட்டு வந்தது அவனது சுற்றம். ஆனால்  சம்மதம் சொல்ல தயங்குகின்றனர்  பெண்ணின் பெற்றோர்.  அப்போது அவர்களிடம் அந்தப் பெண்ணின்  தோழி சொல்கிறாள். அவன் நல்ல இடம் தான். அவன் தோட்டத்தில் விளையும் அவரைக் காய்களை பறிப்பதற்காக நிறையக் குரங்குகள் வரும். அந்தக் குரங்குகளை விரட்டும் கூச்சல் கேட்கும் தோட்டம் அது . அவனைத் திருமணம் செய்து கொள்ள அழகும் குணமும் நிறைந்த பசு போன்ற பெண்கள் இருக்கிறார்கள். உறவு விட்டுப் போகக்கூடாது என்று தான் இவளைப் பெண் கேட்டு வந்திருக்கிறான்.  "சரி" என்று சம்மதம் சொல்வது தான் சரியானது. ஒளிந்திருக்கும் செய்தி: அவரைக்காய் அவனுக்குச் சொந்தம். அதை, கண்ட குரங்குகள் எல்லாம் பறிக்க விட்டுவிட்டு அவன் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான்.  அவரைக் காய் தான் அந்தப் பெண். இவனைத் தவிர "பெண் பார்க்கிறேன்" என்று சொல்லிக் கொண்டு வரும் பிறரெல்லாம் குரங்குகள்.  அவரை அருந்த மந்தி பகர்வர் பக்கின் தோன்றும் நாடன் வேண்டின், பசுப்போல் பெண்டிரும் பெறுகுவன்; தொல் கேள் ஆகலின், நல்குமால் இவட்கே. (ஐங்குறுநூறு 271)